21.5.06

அவர்கள் மாறவேயில்லை...


இன்று மாலை அப்பாவுடன் போனில் பேசிக்கொண்டிருந்தேன். நாங்கள் பேசியதைவிட சிரித்ததுதான் அதிகம். அவருக்கு புற்று நோயாம், இன்னும் மூன்று நாட்களில் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேரவேண்டுமாம். அதைப் பற்றி அவர் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. தனது சுரங்கத் தொழில் நாட்களைப் பற்றி சிரிக்க சிரிக்க பேசிக் கொண்டேயிருந்ததில் எனக்கும் எந்த கவலையும் தெரியவில்லை. இறுதியில் நானும், "அப்பா இது நல்லது. பைபிளில் கூட இப்படித்தான், 'நகைச்சுவை, இதயத்திற்கு மருந்தினை விட களிப்பான ஒன்று' என்று இருக்கிற்து" என்றேன்.

கிறிஸ்மஸ¤க்கு சுரங்கத் தொழிலாளர்களுக்கு நான்கு வார விடுமுறை. விடுமுறையினை விட முக்கியமானது, அதன் தொடக்கத்தில் அளிக்கப்படும் விடுமுறைக் கொடை. அந்த ஒரு மாத விடுமுறையினைக் கொண்டாட அது போதும். பெருந்தொகையினை சுமந்து அனைவரும் தங்கள் தங்கள் வீட்டுக்கு உற்சாகமாக புறப்பட்டு விடுவர். அனைவரும் என்றால் எல்லோருமே அல்ல. சிலருக்கு வீட்டிற்கு போவதை விட நாற்பத்தைந்து மற்றும் போக்கர் சூதாட்டம்தான் முக்கியம். வீடெல்லாம் அதற்குப்பிறகுதான்....

அதற்கிடையில் சுரங்கத்தின் குளியல் கூட கண்காணிப்பாளர், 'இந்த அழுக்குப் பிடித்த சுரங்கச் சீருடையினை எல்லாம் வீட்டுக்கு எடுத்துச் செல்கிறீர்கள? அல்லது நான் தூர எறியட்டுமா?' என்று கத்துவார். தெள்¢வுடனிருக்கும் ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் அதைச் சட்டை செய்வதில்லை. 'உன் இஷ்டம்' என்னும் அவர்களது கவனம் ஆட்டத்தில் இருக்கும் அல்லது வீட்டுக்கு செல்லும் உற்சாகத்திலிருக்கும். கையிலிருக்கும் பணத்துக்கு புதுச் சீருடை வாங்கிக் கொள்ளலாமே! பழைய சீருடையினை வாங்கிச் செல்லும் சிலரை மற்றவர்கள் அற்பமாகப் பார்ப்பார்கள்.

குளியல் கூட தொழிலாளி அவர்களை திட்டிக் கொண்டே பழைய சீருடைகளை எடுத்துப் போய், குளியலறைக்கு பின்புறமாக உள்ள புதர்களடர்ந்த சதுப்புக் காட்டில் தனக்கு முடிந்தமட்டும் முழுச் சக்தி கொண்டு வீசி எறிவான்.

நான்கு வார விடுமுறை சீக்கிரமாகவே ஓடி விடும். மறுபடியும் ஷிப்ட் தொடக்கத்துக்கான சங்கொலிக்கு அனைவரும் ஆஜராகி விடுவர். அனைவரும் என்றால் எல்லோருமே இல்லை. சிலர் குளியலறைக்கு பின்புறமாக உள்ள புதர்களடர்ந்த சதுப்புக் காட்டில், அவசர அவசரமாக எதனையோ தேடிக் கொண்டிருப்பர். இறுதியில் அனைத்து தொழிலாளர்களும் வந்து ஒரு சேர நிற்கும் போது அது ஒரு வேடிக்கையான காட்சியாக இருக்கும்.

பலர் புத்தம் புதிய பளபளக்கும் சீருடையில் நிற்பர். மற்ற சிலரின் உடைகள்தான் வினோதமானதொரு கலவையில் இருக்கும். குள்ளமான ஒருவர் தனது கால்சாராயினை கீழே மடித்து விட்டிருப்பார். ஆறு அடி உயரத்துக்கும் மேலான நெட்டையானவரோ, தனது முட்டிக்கு கீழே சிறிது தூரத்தில் நின்று போன கால்சாராயோடு பரிதாபமாக காட்சியளிப்பார். வேறு சிலர் ஒரு காலில் எட்டாம் நம்பர் அளவுள்ள ஷ¤வும் மறு காலில் பத்தாம் நம்பர் ஷ¤வுமாக, அழுக்குப் பிடித்த, பொத்தலாய், கந்தலான ஸ்டாக்கின்ஸ¤டனும் அதை விட கந்தலான் பனியனுடனும் பார்ப்பதற்கே கோரமாய் நின்று கொண்டிருப்பார்.

வருடம்தோரும் தவறாமல் நடக்கும் நிகழ்ச்சியாம் இது. இதைச் சொல்லி விட்டு அப்பா பெரிதாகச் சிரித்தார், "ஒரு போதும் இந்த சுரங்கத் தொ'ழிலாளர்கள் மாறவேயில்லை" என்றார்.....


2 comments:

Anonymous said...

Hi! Just want to say what a nice site. Bye, see you soon.
»

Anonymous said...

Very pretty site! Keep working. thnx!
»