30.12.07

மேலும் கேள்விகள், ஆங்கிலத்தில்



கடந்த பதிவில் கேள்வி கேட்டிருந்த நண்பர் மேலும் சில கேள்விகளை கேட்டிருந்தார். ஒரு ஆவணமாக இருக்கட்டுமே என்று எனது பதிவிலியே பதில்களை தருகிறேன்.

சுவராசியமாக ஏதும் இருக்காது, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலையுச்சியிலுள்ள முதலியார் ஊத்து என்ற இடத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தை தவிர...


Question : Is the photographs/video taken using Mobile phones/Digital
cameras are accepted by Indian evidence act?

Answer : Indian Evidence Act deals with photographs as Secondary Evidence. It can be accepted as evidence, subjecting the person who took the photograph to examination. However it is to be shown that the picture is foolproof or otherwise it would not be relied by the Court. I don’t think any court would believe a digital photo, as the same could be manipulated easily.

I saw in Trichy, a Traffic Police clicking the number plates of the bikes, violating red signal.

I read in newspaper that in Pramod Mahajan's case, an expert using a laptop and net connection demonstrated before the court that it was even possible to tamper with the sms messages stored in a cellphone.

***


Question :As per Cr. P.C - Sec 39, it is defining the sections of offences of IPC, for a public can give information to police. IPC sec 159-160 offence of affray) is not there. So a public cannot inform to police, if he saw an affray. Am I right?

Answer : Kindly read the section again. Section 39 makes it compulsory for every person to give information. That does not mean you cannot give information regarding the commission of the offences not listed therein.

In respect of those offences listed in Section 39 you are legally bound to give information. Hence failure to give information will attract the offence defined under Section 202 of IPC.

***


Question : As per Cr. P.C - Sec 43, any private person may arrest or cause to be arrested any person who in his presence commits a non-bailable and cognizable offence. So no private person (X) can make a private arrest of a person (Y), if he (Y) commits an offence of affray (IPC-160) which is bailable and cognizable . Am I right?

Answer : For a private person to effect arrest, the offence must have been both cognizable and non bailable. Since affray is bailable offence, private person cannot effect arrest.

Madurai

301207



பயணம் 1 - வேட்டங்குடி


Vettangudi Birds Sanctuary

மதுரை - மேலூர் - திருப்பத்தூர் சாலையில், திருப்பத்தூருக்கு சில கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். அதிக அளவில் பிரபலமாகாத இந்த சரணாலயத்திற்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு இருநாட்களுக்கு முன்பு போனது நல்ல அனுபவம்.

பறவைகளைப் பார்ப்பதற்கு வசதியாக உயரமான கண்காணிப்பு கோபுரம் உள்ளது. சரணாலயத்தை ஒட்டி உள்ள குடியிருப்பினை விட வேறு மனித இடையூருகள் இருக்காது. பறவைகளுக்கு தொந்தரவு என, கிராம மக்களும் தீபாவளிக்கு வெடி கூட வெடிப்பதில்லை.


Rest in Nest

மதுரை மேலூர் 30கி.மீ. பின்னர் மேலூரிலிருந்து சுமார் 25கி.மீ ரம்மியமான சாலையில் பயணம் செய்தால், வேட்டங்குடி வந்துவிடும். ஆனால், வழியில் ரொட்டித்துண்டினை பாதியாக வெட்டியது போன்று குன்றுகளை அறுத்து கிரானைட் கற்பாளங்களாக மாற்றுவதை காணும் அவலத்தினை தவிர்க்க இயலாது!



Ascent

கடைகள் ஏதும் இல்லை என்பதால், உணவுப் பொருட்களும், தண்ணீரும் கொண்டு செல்வது நல்லது. பிளாஸ்டிக் தவிர்க்க இயலாது எனில், கையுடன் திரும்பக் கொண்டு வந்து விடவும்.


Descent

படங்களை பெரிதாக பார்க்க, படத்தின் மீது க்ளிக்கவும்!

24.12.07

மீண்டும் மீண்டும் மரணதண்டனை!



The mood and temper of the public with regard to the treatment of crime and criminals is one of the most unfailing tests of the civilizations of any country

-Winston Churchill


வின்ஸ்டன் சர்ச்சில் மீது எனக்கு பெரிய அளவில் மரியாதை ஏதும் இல்லையெனினும், தனது எண்ணங்களை சிறந்த முறையில் வெளியிடும் அவரது ஆற்றல் குறித்து வியப்பு கலந்த மதிப்பு உண்டு. கடந்த நூறு ஆண்டுகளில் தோன்றிய அரசியல் தலைவர்களில் புகழ் மிக்க communicatorகளாக விளங்கிய மிகச் சிலரில் அவரும் ஒருவர்.

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில், சர்ச்சிலின் மேற்கண்ட ஆங்கில வரிகள் அலசப்பட்டது என்பது அவரது மேதமைக்கு ஒரு சான்று!

அவரது இந்த வாக்கியத்தினை பல்வேறு பரிமாணங்களில் பார்க்கலாம் என்றாலும், சமீபத்தில் மதறாஸ் உயர்நீதிமன்றத்தான் ‘தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில்’ உறுதி செய்யப்பட்ட தூக்குத் தண்டனையினை இந்த வரிகளால் எவ்வாறு அணுகுவது என்பதை அவரவர் யூகத்திற்கே விடுகிறேன்.



மரணதண்டனை குற்றங்களை விட குற்றவாளிகளின் தகுதி ஓரளவிற்கும், பாதிக்கப்பட்டவரின் தகுதி பெருமளவிற்கும் தீர்மானிப்பதாக மரணதண்டனை எதிர்ப்பாளர்கள் ஒரு வாதத்தினை எடுத்து வைக்கிறார்கள். எனக்கு உடனடியாக மனதில் தோன்றும் பில்லா, ரங்கா பின்னர் கல்கத்தாவில் சமீபத்தில் தூக்கிலிடப்பட்டவர் வழக்கிற்கும் தர்மபுரி வழக்கிற்கும் ஒரு ஒற்றுமை உள்ளது.

தற்பொழுது உள்ள சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தண்டனை குறைக்கப்படும் வாய்ப்பு அதிகம். அதுதான், இறந்தவர்களுக்கு செலுத்தக்கூடிய பொருத்தமான அஞ்சலியாக இருக்கும்.

***

சில சமயங்களில், இப்பதிவுகளை படிக்கும் நண்பர்கள் தங்களது சந்தேகங்கள் குறித்து மின்னஞ்சல் அனுப்புவார்கள். அவ்வாறு கடந்த வாரம் மின்னஞ்சலில் நண்பர் ஒருவர் கேட்ட கேள்விகளுக்கான பதில்களை இங்கேயே தருகிறேன்.

கேள்வி : ஆயுள் தண்டனை என்பது ஆயுள் வரை என்று குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 31(அ) எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அப்படிப்பட்ட நபருக்கு 14 ஆண்டுகளுக்கு மேலான தண்டனை அளிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளதே?

பதில் : பிரிவு 31னை முழுவதும் படித்தால் இந்த குழப்பம் தீரும்.

ஒரே செயலில் பல குற்றங்கள் இணைந்து வரும். உதாரணமாக வெடிகுண்டு வீசி ஒருவரை காயப்படுத்தினால் கொலை முயற்சி குற்றமும் வரும். வெடிப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றமும் வரும். இரண்டிற்கும் தனித்தனி தண்டனை வழங்கப்படும். நீதிபதி நினைத்தான் இந்த தண்டனைகளை குற்றவாளி ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று கூற இயலும். ஆனால் அவ்வாறாக ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்கையில் மொத்த தண்டனைக் காலம் 14 ஆண்டுகளுக்கு மிகக்கூடாது என்பதுதான் இந்தப் பிரிவு கூற வருவது.

ஆனால் ஆயுள் தண்டனையினைப் பொறுத்தவரை நீதிபதி கூறினாலும், கூறாவிட்டாலும் மற்ற தண்டனைகள் அதனுடன் சேர்ந்தே அனுபவிக்கப்படும். எனவே இந்தப் பிரிவு ஆயுள் தண்டனையினைப் பொருந்தவரை, பொறுத்தமற்றது.

***

மரணதண்டனைக்கேதுவான குற்றத்தினைப் புரிந்தவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் 14 ஆண்டுகளை சிறையில் கழிக்காமல் அவரது தண்டனைக் காலத்தை அரசு குறைக்க முடியாது என்று Cr.P.C. பிரிவு 433A கூறுகிறது.

ஆனால் சீர்திருத்தப்பள்ளிகளில் சேர்க்கப்படும் (Borstal School) சிறார்களுக்கு (Adolescents) (16 முதல் 21வயதுடையவர்கள்) இந்த விதி பொருந்துமா என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விவாதிக்கப்பட்டு தீர்ப்பினை எதிர்நோக்கியுள்ளார்கள்.

***

ஆண்டிப்பட்டி மலைபகுதியில் பழங்கால குகை ஓவியங்கள் உள்ளன என்று குமுதத்தில் ஒருவர் எழுதியதை வைத்து, நாங்களும் பளியர் ஒருவர் துணையுடன் சித்திரப்புடவு எனப்படும் புடவிற்கு சென்றால், ஓவியங்களை காணவில்லை. ஆனால், 500 மீட்டர் உயரமுள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் அருமையான ஒரு நடைப்பயணம்!

முக்கியமாக எங்கள் பார்வையில் சிக்கிய படத்தில் நீங்கள் காணும் நபர்!!

மதுரை
24.12.07

1.12.07

மலர்கள்-புகைப்பட போட்டிக்காக...

என் வீட்டுத் தோட்டத்தில்...





Canon Powershot S5IS
Auto
Ex 1/250sec
ISO200
AV F 2.71
FL 6.0mm
Super Macro





என் வீட்டுப் பக்கத்தில்...




Manual
Ex 1/1600 seconds
ISO 800
AV F 4.51
FL 6.00 mm
Macro




இவை பறிப்பதற்கல்ல...





மதுரை
011207