3.12.10

திடீர் சைலேந்திரபாபுகள்…


இந்த நிதிபதி எத்தனை லஞ்சம் கொடுத்து, வாங்கி இந்த பதவிக்கு வந்தாரோ!...


என்னைக்கு நாடு உருப்பட போவுதோ??? இந்தமாதிரி நீதிபதி இருந்தா லஞ்சம் வாங்குறதுல இந்திய no 1 ஆய்டும்......


ஐயா, கணம் நீதிபதி அவர்களே, இந்திய குட்டிச்சுவராய் ஆவதற்கு தங்களின் தீர்ப்பு ஒன்றே போதும். இனி அரசு ஊழியர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. நீதியரசர் அந்த அரியணையில் இருந்து கூறுகிற ஒவ்வொரு வார்த்தைகளும் ஒரு தீர்ப்பு என்றே கருதப்படும் என்கிற அடிப்படை விசயமே தெரியாத ஒருவரை அரசு இருத்தி இருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது. நன்றி. வளரட்டும் லஞ்சம்! நாசமாகட்டும் இந்தியா!! நிறையட்டும் உங்கள் கை !!!...


இந்தியா நீதி செத்து விட்டது இரண்டாவது முறையாக 1 . பாப்ரி மஸ்ஜித் வழக்கு 2. லஞ்ச வழக்கு . இந்தியன மானம் எங்க?...


அய்யா, நீதி மான்!!!!!! அவர்களே உங்கள் வீட்டில் முதலில் ரெய்டு நடத்த வேண்டும் அய்யா, எவ்வளவு லஞ்சம் கொடுத்து நீதி மான்!!!!!!! ஆநீர்களோ வெட்கம் கெட்ட தீர்ப்புக்கு அதரவு வேறு? வெட்கம் கெட்ட செயலுக்கு அதரவு வேறு?...


நாடே குட்டிசெவரா போகுதுன்க்ராதுக்கு இது நல்ல உதாரணம். நீதிபதி லஞ்சம் கொடுத்து வந்திருப்பருன்னு தோணுது....


இதை சொல்ல எவ்வளவு லஞ்சம் வாங்கினீங்க ? அப்போ மக்கள் வரி கட்டாமல் இருக்கலாம்னு சொல்லுங்க ? இல்லே அவங்களக்கு சம்பளம் இல்லேன்னு சொல்லுங்க.....


இவரு எங்கியோ நல்ல லஞ்சம் வாங்கறாரு போல. அதா மறைக்க இப்படி ஒரு தீர்ப்பு , மக்களே உஷாரு...


நான் இந்தியன் என்று சொல்வதற்கு வெட்க படுகிறேன். இப்படி ஒரு சட்டம் எந்த நாட்டிலும் இருக்காது. இப்படி ஒரு தீர்ப்பை இந்த உலகத்தில் எந்த ஒரு நீதிபதியும் தரமாட்டார்.


mr judge you are not make country proud there is nothing different between you and terrorist

***

மேற்கண்ட அனைத்து அர்ச்சனைகளுக்கும் உரிய, நீதிபதி தற்பொழுது நீதித்துறையில் லஞ்ச லாவண்யத்தை ஒழிக்க சாட்டையை சுழற்றியிருக்கும் ‘ஹீரோ’ மார்கண்டேய கட்ஜு என்றால் ஆச்சரியமாக இருக்கலாம்.

தமிழகத்தின் முக்கியமான தினசரிகளில் ஒன்றான ‘தினமலர்’ கட்ஜூ அவர்கள் வேடிக்கையாக நீதிமன்றத்தில் கூறிய ‘ஜோக்’கை ஏதோ அவர் கூறிய சேரியமான (serious) கருத்து என்பது போல தனது வாசகர்களுக்கு கடத்த, அந்த பத்திரிக்கையின் ‘படித்த’ ‘வெளிநாடுகளில் வசிக்கும்’ பல்வேறு வாசகர்கள் கூறிய முன்னிகைகளின் சில துளிகள்.

சந்தேகமிருந்தால், ‘அரசு அலுவலகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயம்? சுப்ரீம் கோர்ட் கருத்து’ என்ற இந்த செய்தினை படிக்கவும்.

நன்கு படித்த, கணணி உபயோகித்து செய்தியினைப் படிக்கும் அளவிற்கு வசதியுள்ள வாசகர்களே இப்படியென்றால், உடனடியாக யாரையும் மோகன்ராஜாகவும், சைலேந்திரபாபுவாகவும் மாற்றுவது நமது ஊடகங்களுக்கு எவ்வளவு என்பது புரியலாம்.

மதுரை
03/12/10

1 comment:

saravana said...

தொடர்ந்து தினமலர் படித்து வந்தால் உங்கள் மூளை குழம்புவது திண்ணம் !
Please avoid it...they can sensationalize any news.