ஆனந்த விகடன் பேட்டியில் தனது திருமண மண்டபம் இடிக்கப்பட்டதைப் பொறுத்து பொங்கிப் பொறுமியிருக்கிறார் விஜயகாந்த்!
ஏதோ மற்ற அரசியல்வாதிகளும், நீதிமன்றங்களும் இணைந்து சதி செய்து அவரது திருமண மண்டபத்தினை இடித்தது போல தோற்றத்தினை உருவாக்க நினைக்கிறார். நில ஆர்ஜித சட்டங்களைப் (Land Acquisition Laws) பற்றி அறிந்தவர்களுக்கு, இந்த இடிப்பு ஒன்றும் பெரிய விஷயமில்லை. அரசு குறிப்பிட்ட ஒரு நிலம் வேண்டும் என்று நினைக்கையில், நீதிமன்றங்களால் பொதுவாக இயலக்கூடியது நில உரிமையாளருக்கு போதிய இழப்பீடு கிடைக்கிறதா என்று பார்ப்பது மட்டுமே!
அகில இந்திய அளவில் செயல்படுத்தப்படும் ஒரு திட்டத்தில், விஜயகாந்த் இழந்தது ஒரு துளி. அவ்வளவே! இந்தியா முழுவதும், இச்சாலை அமைப்பதினால், எத்தனை ஆயிரம் நபர்கள் தங்கள் விவசாய நிலங்களை இழக்கின்றனர். அனைவரிடமும் மாற்றுத் திட்டம் உண்டு! இவ்வாறு ஒவ்வொருவரிடமும் மாற்றுத்திட்டம் பெற்று அதனை பரிசீலித்துக் கொண்டிருந்தால் சாலையினை வங்காள வளைகுடாவில்தான் போட வேண்டும்!
சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதில் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் ஒரு கூட்டம், திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் நடத்தாமல், பாதிக்கப்படும் கூடங்குளம் மக்கள் கலந்து கொள்ளும் வகையில் கூடங்குளத்திலேயே நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக. அதற்காக இலவசமாக ஒரு மண்டபமும் தர தயாராக இருந்தனர். இருந்த பொழுதும் நீதிமன்றம் தலையிட மறுத்து விட்டது.
கேவலம், கூட்டம் நடைபெறும் இடத்தினை மாற்றவே அதிகாரிகள் தயாராக இல்லாத பொழுது...திட்ட இடத்தினை மாற்றுவதாவது.
பொதுவாகவே பெரிய திட்டங்களை அரசு செயல்படுத்த முயல்கையில், அது சர்தார் சரோவர் அணைக்கட்டாயினும் சரி, சேது சமுத்திர திட்டமானாலும் சரி, கூடங்குளம் அணுமின்நிலையமானாலும் சரி...நீதிமன்றங்கள் அதில் ஓரளவுக்கு மேல் கேள்வி கேட்பதில்லை. விஜயகாந்தின் கலியாண மண்டபம் எம்மாத்திரம்.
சர்தார் சரோவர் திட்டத்தினால் பாதிப்படையும் பழங்குடிகள், சேது சமுத்திர திட்டத்தினால் பாதிப்படையலாம் என அஞ்சும் மீனவர்கள், கூடங்குளம் அணு உலைக்கு தங்கள் நிலங்களை இழந்த விவசாயிகளின் இழப்பு விஜயகாந்திற்கு ஏற்ப்பட்ட இழப்பிற்கு சற்றும் குறைந்ததில்லை!
கலியாண மண்டபம் இடிக்கப்பட்டாதால் பாதிப்படைந்தது, மற்றவர்களைப் போல தனக்கு வாழ்வாதரப் பிரச்னையில்லை என்று விஜயகாந்த் ஆறுதலடைவது நன்று!
Showing posts with label Politics. Show all posts
Showing posts with label Politics. Show all posts
29.5.07
விகடன் - கலைஞரின் கோபம்
சில தினங்களுக்கு முன்னர் ‘திருப்பிக் கொடுத்தால் தாங்குவதற்கு பலம் இருக்கிறதா?’ என்று ஏறக்குறைய தினகரன் சம்பவத்தினை ஞாபகப்படுத்தும் தோரணையில் முதல்வர் கலைஞர், ஆனந்த விகடன் பத்திரிக்கையின் ஒரு நையாண்டியினைப் பற்றி எரிச்சலோடு குறிப்பிட்டதைப் படித்ததும், ‘ஏதோ ஆனந்த விகடன் அரசியல் நையாண்டியில் இதுவரை துக்ளக் கூட தொடாத உச்சத்தை எட்டிவிட்டது போல’ என்று நினைத்தேன். ஆனந்த விகடனை வாங்கிப் பார்த்தால், எவ்வித புத்திசாலித்தனமும் இல்லாத வழக்கமான நகைச்சுவைதான்.
இவ்வளவு தூரம் கடுமையான ஒரு பதிலினைக் கூறும் வகையில், வரம்பு மீறிய நக்கல், நையாண்டி ஏதும் அதில் இல்லை! முதல்வரின் மனைவிகள் அரசியலில் கொஞ்சம் கூட பங்கு பெறுவதில்லையா? தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள் பற்றி விமர்சனம் கூடாது என்றால் சகிகலா குடும்ப உறுப்பினர் பற்றியும் விமர்சனம் கூடாதுதான்.
முதல்வரோடு தங்களை நெருக்கமாக காட்டிக் கொள்வதில், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகள் பெருமை அடைவது உண்டு. அதற்கு கொடுக்கும் விலைதான் இத்தகைய எதிர்வினைகள். தன்னிடம் இவ்வாறு உரிமை எடுத்துக் கொள்ளும் பத்திரிக்கைளில் இருந்து வரும் சிறு விமர்சனமும் முதல்வரை அதிகம் பாதிக்கிறது.
தமிழகத்தின் முதுபெறும் அரசியல் தலைவர் என்ற தகுதியினை அடைவதற்கு முதல்வர் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது நன்று!
இவ்வளவு தூரம் கடுமையான ஒரு பதிலினைக் கூறும் வகையில், வரம்பு மீறிய நக்கல், நையாண்டி ஏதும் அதில் இல்லை! முதல்வரின் மனைவிகள் அரசியலில் கொஞ்சம் கூட பங்கு பெறுவதில்லையா? தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள் பற்றி விமர்சனம் கூடாது என்றால் சகிகலா குடும்ப உறுப்பினர் பற்றியும் விமர்சனம் கூடாதுதான்.
முதல்வரோடு தங்களை நெருக்கமாக காட்டிக் கொள்வதில், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகள் பெருமை அடைவது உண்டு. அதற்கு கொடுக்கும் விலைதான் இத்தகைய எதிர்வினைகள். தன்னிடம் இவ்வாறு உரிமை எடுத்துக் கொள்ளும் பத்திரிக்கைளில் இருந்து வரும் சிறு விமர்சனமும் முதல்வரை அதிகம் பாதிக்கிறது.
தமிழகத்தின் முதுபெறும் அரசியல் தலைவர் என்ற தகுதியினை அடைவதற்கு முதல்வர் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது நன்று!