26.2.12

வேளாச்சேரியும், ப்ரமக்குடியும்…


முதலில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனில் ஆரம்பிக்கும். பின்னர் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற கொலைகாரனை போட்டுத் தள்ளினால் என்ன என்ற எண்ணம் பிறக்கும். அடுத்து கொள்ளைக்காரன்

கோவையில் கடந்த வருடம் நடைபெற்ற ‘மோதல்சாவு பற்றிய எனது கட்டுரையொன்றில்தான் இவ்வாறு நான் குறிப்பிட்டேன். நான் கூறியது போல கடந்த வாரம் கொள்ளைக்காரர்களையும் சுட்டுத்தள்ளியாயிற்று. இனி தனிப்பட்ட நபர்களின் சொத்துப் பிரச்னையில் தலையிட்டு துப்பாக்கியை காட்டி மிரட்ட வேண்டியதுதான் பாக்கி.

ஆனாலும், நம்பிக்கையளிக்கும் ஒரு விடயம், காவல்துறை இந்த முறை நடந்து கொண்ட முறை. பத்திரிக்கைச் செய்திகளைப் பார்க்கும் பொழுது, தனது ‘ஈகோவுக்கான சவாலாக வங்கிக் கொள்ளையை எடுத்துக் கொண்ட காவல்துறை அவசரகதியில் செயல்பட்டு பல ஓட்டைகளை விட்டுள்ளது. இம்மோதல் சாவுகள் குறித்து நாளை நீதிமன்றத்தில் அல்லது மனித உரிமை ஆணையத்தில் நடக்கப் போகும் விசாரணையில், காவல்துறை பல தர்ம சங்கடமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

முக்கியமாக, தேவையில்லாமல் ஊடகங்களின் வாயிலாக கசியவிடப்படும் ‘வட இந்தியர்கள்தாம் இங்கு பெரிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள்என்பது போன்ற கருத்துகள் கொள்ளையர்களின் மாநிலமான பீகாரில் தமிழகத்திற்கு எதிரான பொதுக்கருத்தினை உருவாக்கி, மோதல்சாவு குறித்து நடக்கவிருக்கும் விசாரணையில் காவலர்களுக்கு எதிரான நிலையை பீகார் அரசே எடுக்க வேண்டிய சூழல் கூட ஏற்ப்படலாம்.

இத்தாலியர் ஒருவர் இந்தியாவில் சிறைபிடிக்கப்படுகையில், இத்தாலிய அரசு அவருக்கான சட்டப்பாதுகாப்பினை முழுமையாக அளிக்க முன் வருகையில், பீகார் அரசு அப்படிச் செய்யாது என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.

மோதல் சாவு நிகழ்வுகளில் காவலர்களின் பாதுகாப்பு அரசுத்தரப்பில் கிடைக்கும் ஆதரவு. ஆனால் தேவையில்லாமல் ‘வட இந்தியர்கள் என்ற ரீதியில் பிரச்னையை கொண்டு செல்வதன் மூலம், ஒரு மாநில அரசு காவலர்களுக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்தால், சம்பந்தப்பட்ட காவலர்களுக்கு பிரச்னை ஏற்ப்படலாம்.

இதனை எதிர்பார்த்துதான் நேற்று, ‘கொள்ளையர்களுக்கு நக்ஸலைட் தொடர்பு என்ற செய்தி கசியவிடப்பட்டது என்று நினைக்கிறேன்.

சைலேந்திரபாபுவுக்கு சமர்ப்பித்த முதலில் குறிப்பிட்ட எனது பதிவினை திரிபாதிக்கும் சமர்ப்பிக்கிறேன்.

-oOo-

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் கூட இப்படித்தான். முதலில் சம்பந்தப்பட்ட காவலர்கள் ‘கெத்தாகத்தான் இருந்தார்கள். உயர்நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் தற்பொழுது சிபிஐ விசாரணையை துவக்கியுள்ளது. முறையாக புலன் விசாரணை நடத்தப்பட்டால் சிலருக்கு பிரச்னை ஏற்ப்படலாம் என்பதால், சம்பந்தப்பட்டவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

முக்கியமாக, மரணமடைந்த ஐவரில் இருவரின் மரணம் பிரச்னை ஏற்ப்படுத்தலாம். கலவரத்தை ஒடுக்க நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஐவர் பலியானார்கள் என்பது காவல்துறையின் வாதம். அப்படியானால் இருவர் மரணமடைந்தது கைகள் மற்றும் கால்களின் எலும்புகள் முறியும் வண்ணம் தாக்கப்பட்டதால் என்று அவர்களின் பிணக்கூறாய்வு அறிக்கை கூறுகிறது. யார் இவர்களை இவ்வாறு தாக்கினார்கள் என்று ஆராயப்பட்டால், சம்பந்தப்பட்டவர் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்ப்படலாம்.

-oOo-

நேற்று ஹெராயின் பற்றிய நேஷசனல் ஜியாகிரபி ஆவணப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். இடையே எனது எட்டு வயது மகள் கேட்ட கேள்வி, ‘டிரக்ஸ் அவங்க பெர்சனல் பிராப்ளம், அதுக்கு எதுக்கு போலீஸ் அவங்களை புடிக்கணும்

தூக்கி வாரிப் போட்டது எனக்கு!

மதுரை
26/02/12

7 comments:

PRABHU RAJADURAI said...

கோவை என்கவுண்டர் பற்றிய பழைய பதிவு
http://marchoflaw.blogspot.in/2010/11/blog-post_12.html

PRABHU RAJADURAI said...

இந்தியாவில் எவ்வகையான குற்றவாளிகள் வாழ அருகதை இல்லாதவர்கள் என்று தீர்மானிக்கப்படுகிறார்கள் என்ப்து குறித்த பதிவு
http://marchoflaw.blogspot.in/2010/11/blog-post.html

பாபு said...

//எட்டு வயது மகள் கேட்ட கேள்வி, ‘டிரக்ஸ் அவங்க பெர்சனல் பிராப்ளம், அதுக்கு எதுக்கு போலீஸ் அவங்களை புடிக்கணும்’

தூக்கி வாரிப் போட்டது எனக்கு!//

தூக்கி வாரிப்போட வேண்டியது அச்சிறுமியின் வேண்டாத சிந்தனையைத்தான், இப்போதே!

சமூகம் ஓர் உடலைப் போன்றது என்றும், எங்கோ ஓர் உறுப்பில் தாக்கும் கிருமி மொத்த தேகத்தையும் பாதிக்கும் என்றும் சொல்லிக்கொடுங்கள் ஐயா!

prasanna said...

I think I should recommend you to watch the Noam Chomsky documentary "Manufacture of Consent". All your thought logs are fairly interconnected (especially in this post).

The one common factor is the mass media and how it manipulates and constructs our thoughts in a democratic society with its portrayal of events and personalities. The old Japanese movie, Rashomon, comes in to mind. Everybody tries to tell their version of the incident and the truth is probably the well kept secret.

With the shift towards neo-liberalism and free markets, there will be a growing sense of individualism over collectivism. This will noticed in the privileged and urban sections of the society.

You can't help it!

I think, I have to agree with the other blogger's comment on how cells in the body work in unison even though they have are individuals themselves.

prasanna said...

Can you please let me know if Public Interest Litigation can be filed against the following discriminatory profiling followed by Tamil Nadu Police to weed out criminal elements within out of state students? I think it seems to violate the very fabric of unity amidst diversity.

http://www.thehindu.com/news/cities/chennai/article2958226.ece

Please let me know. If this can be filed from out of Country, I am willing to do. Just let me know the address and procedure to do so.

Regards.

PRABHU RAJADURAI said...

Yes you can file such PIL in our High Court. You can contact either Mr.Radhakrishnan, who appears for our fellow blogger 'Savukku Shankar' or Mr.Sankara subbu, Advocate. There or other Advocates, who would willingly fight for Human Rights violations. However I am doubtful, you would get a favourable ear in our High Court. They are very reluctant to go against the measures taken by the police in the name of crime control

prasanna said...

Thank you for your response.

Regards.