12.1.07

பின் தொடரும் ஆ...பத்து! - 3

வாகன காப்பீடு

வாகன காப்பீடுகளும் மற்ற காப்பீடுகளைப் போலவே என்றாலும், முக்கியமான ஒரு வித்தியாசம் உள்ளது. மற்ற காப்பீடுகளில் காப்பீட்டின் பலன் சென்று சேர்வது காப்பீடு செய்தவருக்கு அல்லது அவரது வாரிசுகளுக்கு. உதாரணமாக மருத்து காப்பீட்டின் பலன் காப்பீடு செய்தவருக்கும், ஆயுள் காப்பீட்டின் பலன் அவரது வாரிசுகளுக்கும் கிடைக்கும்.

ஆனால் வாகன காப்பீட்டின் பலன் இறுதியில் சென்று சேர்வது விபத்தில் காயமடையும் சம்பந்தமில்லாத மூன்றாவது நபர். எனவே இவ்வாறு மூன்றாவது நபர்களுக்காக காப்பீடு செய்வதில் வாகன உரிமையாளர்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை. எனவே வாகன காப்பீடானது கட்டாயமான ஒரு விஷயம்...அதாவது எந்த ஒரு வாகனமும் காப்பீடு செய்யப்படாமல் பயன்படுத்துதல் கூடாது.

அடுத்த ஒரு முக்கியமான விஷயம், வாகன காப்பீட்டினைப் பொறுத்து அதற்காக எவ்வளவு கட்டணம் (premium) செலுத்தப்பட்டிருந்தாலும் சிலரைப் பொறுத்தவரை கண்டிப்பாக காப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்ற சட்டப்படியான கட்டாயம் உண்டு. இந்த வகையான காப்பீடுகளை மூன்றாம் நபர் காப்பீடு (A Policy or Act Policy or commonly as Third Party Policy) என்று அழைக்கிறார்கள்.

உதாரணமாக பேருந்து, டாக்ஸி, ஆட்டோ போன்ற வாடகை வண்டிகளில் (Public Service Vehicles) பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் அவர்களுக்கு அளிக்க வேண்டிய இழப்பீடு, அது எத்தனை கோடியானாலும் சரி, அந்த வண்டிக்கு காப்பீடு என்று ஒன்று இருந்தால் கண்டிப்பாக காப்பீடு நிறுவனமே அளிக்க வேண்டும்.

இவ்வாறு ஏறக்குறைய அனைத்து நபர்களுக்கும் கட்டாயமாக காப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டுமானாலும், சில நபர்களைப் பொறுத்தவரை கட்டாயமல்ல. அப்படிப்பட்டவர்களுக்கு வாகன உரிமையாளரே இழப்பீடு வழங்க வேண்டும். இங்குதான் முதலில் எச்சரித்த ஆபத்துகளில், முக்கியமான ஆபத்து உள்ளது.

மேலும் சில ஆபத்துகள் உள்ளன...அவற்றை வாகன உரிமையாளர் ஒவ்வொருவரும் அறிந்திருந்தல் அவசியம்!

to be continued...

குறிப்பு : எனது முந்தைய பதிவுகளில் பாவத்தின் சம்பளம் என்ற தலைப்பில் மோட்டார் இன்ஸுரன்ஸ் குறித்து முக்கியமான சில விபரங்களை எழுதியுருக்கிறேன். சுவராசியமான பதிவு என்பதை விட வாகன காப்பீடு குறித்த அதிக புரிதல்களுக்கு அது உதவும் என நம்புகிறேன்.

1 comment:

இலவசக்கொத்தனார் said...

நல்லாச் சொல்லறீங்க. தொடர்ந்து எழுதுங்க.