11.1.07

பின் தொடரும் ஆ...பத்து! - 2

வாகன விபத்து இழப்பீடு

வாகன சட்டமானது (Motor Vehicle Act) இந்தியாவில் முதன் முதலில் 1939ம் ஆண்டு இயற்றப்பட்டு பின்னர் 1988ம் ஆண்டு புதிய சட்டமாக மீண்டும் இயற்றப்பட்டது. 1994ம் ஆண்டு முக்கியமான சில மாறுதல்கள் கொண்டு வரப்பட்டன. மோட்டார் வாகனம் குறித்த பல நிகழ்வுகளுக்கான சட்டமாக இது இருப்பினும், வாகன விபத்துகளால் ஏற்ப்படும் இழப்பீடு குறித்தும் உள்ள சில பிரிவுகள் முக்கியமானவை.

சுருக்கமாக கூறினால், இந்த சட்ட பிரிவுகளின்படி ஒரு வாகனத்தினை பயன்படுத்துவதன் மூலம், யாருக்கும் உடற்காயமோ, மரணமோ அல்லது பொருட் சேதமோ ஏற்ப்பட்டால் அந்த மோட்டார் வாகனத்தின் உரிமையாளர் அல்லது வாகனத்தின் காப்பீடுதாரர் (Insurer) தகுந்த நஷ்ட ஈட்டினை வழங்க வேண்டும்.

இழப்பீட்டின் அளவானது, உதாரணமாக ஒருவருக்கு மரணம் சம்பவித்தால் அவரது வயது, சம்பாத்தியம் மற்றும் சில சமயங்களில் அவரை சார்ந்திருக்கும் நபர்களை வைத்து கணக்கிடப்படுகிறது. அமெரிக்காவில் மருத்துவராக பணியாற்றும் ஒரு இந்தியருக்கு ஏற்ப்பட்ட மரணத்திற்கான இழப்பீடு சுமார் பத்து கோடி இந்திய ரூபாய்களை எட்டி விட்டதிலிருந்து, இங்கு வழங்கப்படும் இழப்பீட்டின் அளவினை புரிந்து கொள்ளலாம். சமீபத்திய தீர்ப்புகளின் படி சிறு குழந்தைக்கான மரணத்திற்கான நஷ்ட ஈடானது இரண்டு லட்சம் ரூபாயினையும் தாண்டிச் செல்கிறது.

காயம் ஏற்ப்படுகையிலோ, அவரது முழுமையான மருத்துவச் செலவு முதற்கொண்டு காயத்தின் தன்மையால், அவரது வேலை செய்யும் திறன் பாதிக்கப்படும் அளவு வரை பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. தண்டுவடத்தில் ஏற்ப்படும் காயத்தால், முழு இயக்கமும் அற்றுப் போனவர்களுக்கான நஷ்ட ஈடு சில சமயங்களில் ஐம்பது லட்சத்தினை தாண்டுகிறது.

முக்கியமாக கவனிக்க வேண்டியது, இழப்பீட்டினை வழங்க வேண்டியது தவறு செய்யும் வாகன ஓட்டியல்ல. மாறாக, வாகனத்தின் உரிமையாளர்!

விபத்தினால் காயமுற்றவர்களை, இவ்வாறு வாகன உரிமையாளரிடம் நஷ்ட ஈட்டினை வாங்குமாறு பணிப்பது சரியா? எனவேதான் வாகன காப்பீடு!

1 comment:

PRABHU RAJADURAI said...

to be continued...