11.1.07

பின் தொடரும் ஆ...பத்து! - 1

முன்னுரை

“மாமா, யமாஹா பைக் புதுசா? பிரமாதமா இருக்கே?”
“ஆமாம், ஓட்டிப் பார்க்கிறாயா? அப்படியே ‘ஜிவ்’னு பறக்கிற மாதிரி இருக்கும்”

***
“ஹாய், தினேஷ் இங்க எங்க நிக்கிறே! வா, காருல ஏறு”
“ரொம்ப தாங்ஸ்டா, பாண்டி பஜாரில் இறக்கி விடு போதும்”

***
“நமக்கு யார் கிட்டயும் கை கட்டி சம்பளம் வாங்குறதெல்லாம் பிடிக்காது. இரண்டு லாரியோட தொழிலை ஆரம்பித்தேன்...இப்ப இருபது லாரியா பெருகிப் போச்சு! இன்றைக்கு ஆயுத பூஜையாச்சா? அதான், கிராமத்திலிருக்கிற எல்லாரையும் லாரியில அள்ளிப்போட்டுகிட்டு மலைக்கோயிலுக்கு போய்க்கிட்டு இருக்கேன், நீயும் வருகிறாயா?”

***
இவை சாதாரணமாக, நமது தினசரி வாழ்க்கையில் கேட்கக்கூடிய வார்த்தைகள்தான், நிகழக்கூடிய சம்பவங்கள்தான்! ஆனால், இதற்குப் பின்னர், யாரும் தனது வாழ்நாட்கள் முழுவதும் ஓடி ஓடிச் சம்பாதித்த செல்வங்கள் அனைத்தையும் இழக்கக்கூடிய அபாயம் இருப்பது தெரியுமா?

இந்த ஆபத்தினை புரிந்து கொள்ள, நம்மில் அனைவருமே இயந்திர வாகன விபத்துகளினால் (Motor Vehicle Accident) ஏற்ப்படும் உடற்காயம் அல்லது மரணம் போன்ற இழப்புகளுக்காக அளிக்கப்பட வேண்டிய இழப்பீடு (Compensation) குறித்தும், அவற்றை அளிக்கும் பொறுப்பினை ஏற்க்கும் காப்பீடுகள் (Insurance) குறித்தும் அறிந்திருத்தல் அவசியம்.

ஏதோ சட்டம் பற்றிய ஒரு கட்டுரையினை எழுதுகிறோம் என்ற அளவில் இல்லாமல், நம்மில் பலரையும் பின் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு ஆபத்தினைப் பற்றி கூடுமானவரை சிலருக்காவது எடுத்துக் காட்டி, அந்த ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வகை செய்ய வேண்டும் என்று வெகுநாட்களாக நான் கொண்டிருக்கும் ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்தப் பதிவு!

இந்த ஆபத்துகளைப் பற்றி நம்மில் பலர் அறியாமல் இருக்கிறோம் என்று கூற நான் தைரியம் கொண்டது, வாகன காப்பீடு கழகங்களுக்காக வழக்கு நடத்தும், கடந்த இரு வருட காலத்தில்தான் நானும், இவற்றை பற்றி முழுமையாக அறிந்து கொண்டது, மற்றும் வாகன இழப்பீடு வழக்குகளில் முக்கியமான சில தீர்ப்புகள், சமீப காலத்தில் வழங்கப்பட்டதாலுமே!

to be continued...

2 comments:

Sivabalan said...

சார்

நல்ல பதிவு

தொடருங்கள்

இலவசக்கொத்தனார் said...

நல்ல பதிவுங்க. நல்ல விபரமாச் சொல்லுங்க.