‘இந்திய நிலையில் அப்படியொரு சாத்தியக்கூறு இல்லை’ என்றேன்.
ஆனால் இன்று தற்செயலாக வலையினை மேய்கையில், பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றும் கண்ணன் அவர்கள் கடந்த இருவருடங்களாக வலையில் எழுதி வரும் Justice Kannan, being non-judgmental என்ற பதிவு கண்ணில் பட்டது.
***
நீதிபதி கண்ணன், தமிழகத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தில் மிக முக்கியமானதும், பழமையானதுமான சட்ட சஞ்சிகையான Madras Law Journalல் ஆசிரியராக, நீதிபதியாக பதவியேற்கும் முன்பு வரை பணியாற்றியவர்.
சட்ட சஞ்சிகை (Law Journal) என்பது, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளை தொகுத்து வெளியிடப்படும் பத்திரிக்கை. வாரசஞ்சிகைகளும் உண்டு, மாத சஞ்சிகைகளும் உண்டு. இவைகளை வாங்கி தொடர்ந்து படிப்பதன் மூலம், வழக்குரைஞர்கள் பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளைப் பற்றித் தெரிந்து கொண்டு, அவற்றை தங்களது வழக்குகளில் பயன்படுத்துவார்கள்.
இவ்வாறான சட்ட பத்திரிக்கைகளின் தொகுப்பே, நாம் வழக்குரைஞர்களின் அலுவலகங்களில் காண்பது.
நீதிபதி கண்ணன், வழக்காடுவதோடு, எழுதுவதிலும் அதிக ஆர்வம் காட்டுபவர். பல்வேறு சட்டம் சம்பந்தமான கட்டுரைகளையும், புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
பல ஆண்டுகளாக நீதிபதியாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், சமீபத்தில்தான் அந்த வாய்ப்பு இவரை தேடி வந்தது. தமிழகத்தில் இவர் பதவியேற்றாலும், சில மாதங்களிலேயெ பஞ்சாப் உயர்நீதிமன்றத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.
***
மணற்கேணி தினத்தந்தி என்றால், நீதிபதி கண்ணனின் வலைப்பதிவு ஹிந்து படிப்பது போல இருக்கும். தீவிரமாக சட்டம் பற்றி அறிந்து கொள்ள அந்த வலைப்பதிவினை நாடலாம். இந்தியாவில் சட்டம் பற்றி விவாதிக்கும் மற்றொரு வலைப்பதிவினை எனக்கு பத்ரிதான் அறிமுகப்படுத்தினார். ஏற்கானவே நான் இங்கு சுட்டிக்காட்டியுள்ள Law and other Things.
***
நீதிபதி கண்ணன், அவர் நீதிபதியாக பதவியேற்பதற்கு முன்பிருந்தே பதிவு எழுதி வருகிறார். நீதிபதிகள், அதுவும் உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதிவு எழுதுவது சாத்தியமான ஒன்றா என்பதை என்னால் கணிக்க முடியவில்லை. முக்கியமாக நீதிபதி பாஸ்னர் கண்ணனைப் போல பேராண்மை (writ) மனுக்களை விசாரிக்கவல்ல நீதிபதியல்ல என்றே நினைக்கிறேன்.
பேராண்மை மனுக்களை விசாரிக்கவல்ல நீதிபதிகள், சமூகத்தை பாதிக்கும் பல விடயங்களில், தங்களை சொந்த கருத்துகளை அனைவரும் அறியும் வண்ணம் இவ்வாறு வெளிப்படுத்துவது சரியா, தவறா என்று எனக்குத் தெரியவில்லை.
உச்ச நீதிமன்ற நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜு கூட முக்கியமான விடயங்களில் ஹிந்துவில் கட்டுரை எழுதுகிறார்.
நீதிபதிகள், பொதுக்கூட்ட மேடைகளில் தங்களது கருத்துகளை தொடர்ந்து வெளிப்படுத்துகையில், கட்டுரை எழுதுவதும் வலைப்பதிவதும் சாத்தியமான ஒன்றுதான்.
உண்மையில், நீதிபதிகள் தங்களது சொந்தக் கருத்துகளை தீர்ப்பில் வெளிப்படுத்துவதை விட தங்களது சொந்த வலைப்பதிவில் வெளிப்படுத்துவது சரியான ஒரு செயலாகவே இருக்க முடியும்.
ஆனால், வலைப்பதிகையில் பதிபவர், தனது பதிவினை ஒட்டி எழும் விவாதத்திலிருந்து விலகியிருப்பது சாத்தியமில்லை. முக்கியமாக எதிர்வினைகளை அனுமதிக்கையில், சில தர்மசங்கடமான நிலைகளுக்கு வலைப்பதிபவரை இட்டுச் செல்லலாம்.
எனினும், இந்தியாவில் வலைப்பதியும் முதல் நீதிபதி கண்ணனானகத்தான் இருக்க முடியும். இந்த அவரது முயற்சி வரவேற்க்கத்தகுந்ததுதான்.
***
எதிர்காலத்தில் நானும் நீதிபதியாகக்கூடிய வாய்ப்பு கிடைத்தால், என்னால் இந்த பதிவினை தொடர முடியுமா என்று நான் சிந்திப்பதுண்டு. நீதிபதி கண்ணன் நம்பிக்கை தருகிறார். ஆயினும், சந்தேகம் இருக்கிறது.
நீதிபதி ஒருவேளை இதன் சட்டச்சிக்கல்களைப் பற்றி எழுதலாம். அதற்கான வாய்ப்புகள் உள்ளது.
ஆயினும் குடிமக்களாகிய உங்களுக்கும் எனக்கும் உள்ள பேச்சுரிமை, அதை நமக்கு உறுதிப்படுத்தும் நீதிபதிகளுக்கு இல்லை, பாவம்!
மதுரை
120109

KODAIKANAL, FOUR YEARS AGO...