4.11.06

அப்சலும், க்ரீமி லேயரும் - 4

மண்டல் கமிஷன் வழக்கு வரை, ஏன் இந்த நாள் வரை பிற்ப்படுத்தப்பட்டவர்கள் சார்பான சக்தி வாய்ந்த பொதுக்கருத்து பரந்துபட்ட அளவில் இந்தியா முழுவதும் ஏற்ப்படவில்லை என்பது எனது அனுமானம். ஏதோ தமிழகத்தில் மட்டுமே பெரிய பிரச்னையாக எடுத்து வைக்கப்படுகிறது. தமிழகத்தில் இட ஒதுக்கீட்டினை உரிமை என்ற அளவில் ஒரு பொதுவான கருத்தாக இருக்கையில், அகில இந்திய ஊடகங்களை கவனித்தால் இட ஒதுக்கீட்டினை சலுகை என்ற அளவிலேயே அணுகுவதை பார்க்கலாம். ஆயினும் மண்டல் கமிஷன் என்ற பூதம் விபி சிங் தயவால் கிளப்பி விடப்பட்ட பின்னர் எந்த ஒரு அரசியல் கட்சியாலும் அதனை எதிர்க்க முடியாமல், ஊடகங்களின் கருத்தும் பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டு தவிர்க்க முடியாத ஒன்று என்ற கருத்தின் அடிப்படையில் உருப்பெற்றன. ஆயினும் இட ஒதுக்கீடு என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உயரிய கருத்திற்கு விரோதமானது என்ற வகையில் தயக்கத்துடனே அணுகப்படுகையில் ‘அதிகபட்சம் 50%’ மற்றும் ‘சரத் யாதவின் பிள்ளைக்கு இட ஒதுக்கீடு தேவையா?’ என்ற வாதங்கள் எடுத்து வைக்கப்படுகையில் அதனை எதிர் கொள்ள யாருமின்றி ஊடகங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுக்கருத்தாக நிலவுகிறது. இன்று கூட தமிழகத்திலேயே பிரபலமாக உள்ள பத்திரிக்கைகளான ஆனந்த விகடன், குமுதம், துக்ளக், குங்குமம், கல்கி போன்றவற்றில் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவான கருத்து, கதை, துணுக்கு, செய்திகளையாவது சில சமயம் பார்க்க வாய்ப்புண்டு. ஆனால், க்ரீமி லேயர் என்பது தேவையில்லை என்ற ஒரு கருத்தினை நான் அறிந்த வரையில் பார்த்ததில்லை.

இவ்வாறான ஒரு நிலையில், உச்ச நீதிமன்றத்திற்கும் மண்டல் கமிஷன் வழக்கில் இட ஒதுக்கீடு மொத்தத்தில் 50%த்திற்கு மிக கூடாது என்றும் க்ரீமி லேயர் என்று ஒரு வகுப்பிற்கு இட ஒதுக்கீடு தேவையில்லை என்றும் கூறுவது இலகுவான ஒரு காரியம் என்பது எதிர்பார்த்ததுதான்.

அரசியலமைப்பு சட்டத்தில் இட ஒதுக்கீட்டிற்கு ஏதும் அதிகபட்சம் வரையறுக்காத நிலையில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூற முடியுமா? என்ற கேள்வியினை சிலர் எழுப்பினாலும், சட்டப்படி அது இயலக்கூடிய காரியமே! உலகிலுள்ள அனைத்து அரசியலமைப்பு சட்டங்களிலும் நமது சட்டம் மிகவும் பெரியது எனினும், எதிர்காலத்தில் நிகழக்கூடிய அனைத்து பிரச்னைகளையும் எதிர்நோக்கி அதனை வடிப்பது என்பது இயலாத காரியம். அவ்வாறான நேரங்களில், அரசியலமைப்பு சட்டகுழு ஒவ்வொரு பிரிவினையும் பற்றி நடத்திய விவாதங்களை அலசிப்பார்ப்பது இவ்வாறு சட்டமியற்றியவர்களின் நோக்கத்தினை அறிய உதவும்.

வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்க வழிகோலும் அரசியலமைப்பு சட்டத்தின் 16(4) வது பிரிவு குறித்து 30.11.48 அன்று நடைபெற்ற விவாதத்தின் முடிவில் திரு.அம்பேத்கர் கூறுவதை கவனியுங்கள்.

Let me give an illustration. Supposing, for instance, reservations were made for a community or a collection of communities, the total of which came to something like 70 per cent of the total posts under the State and only 30 per cent are retained as unreserved. Could anybody say that the reservation of 30 per cent as open to general competition would be satisfactory from the point of view of given effect to the first principle, namely, that there shall be equality of opportunity? It cannot be in my judgment. Therefore the seats to be reserved, if the reservation is to be consistent with sub-clause (1) of Article 10, must be confined to a minority of seats...........

அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழுவின் பல உறுப்பினர்களின் இட ஒதுக்கீடு குறித்து மனதில் எழுந்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வண்ணம் திரு.அம்பேத்கார் ஏறக்குறைய உறுதிமொழி போல பேசிய வாக்கியங்கள் இவை!

எனவே, இட ஒதுக்கீடானது பாதிக்கும் மேலாக இருத்தல் இயலாது என்று மண்டல் கமிஷன் வழக்கில் கூறியதற்கு திரு.அம்பேத்கரின் உரையும் காரணம். ஆயினும் மண்டல் கமிஷன் வழக்கில் எந்த சந்தர்ப்பத்திலும் இருத்தல் இயலாது என்று கூறவில்லை. சில அசந்தர்ப்பமான நிலைகளில் 50% வரையறையினை மீறலாம் என்று அனுமதியளிக்கிறது...எந்த மாதிரியான நிலைகள் என்பதற்கு உச்ச நீதிமன்றம் கூறியுள்ள வரிகளுக்குள் தமிழகத்தினை கொணர முடியுமா? என்பதை அறிய இனி பொறுத்திருக்க வேண்டும்.

***
to be continued...

5 comments:

Sridhar V said...

பலப் புதியத் தகவல்கள்... நன்றாக இருக்கிறது...

அடுத்த பாகத்திற்காக ஆவலுடன்...

Sivabalan said...

நன்றாக செல்கிறது தொடர்..

அடுத்தப் பதிவைப் படிக்க ஆர்வமாக உள்ளது..

தொடருங்கள்

ரவி ஸ்ரீநிவாஸ் said...

I think that the judgment in Indra Sawhney case also cites this view of Dr.Ambedkar.Yet the supporters of 69% reservation would not cite or discuss this.Reservation should not
erase or eclipse the principle
of equality and the fundamental rights of citizens.
When it eclipses or erases
it amounts to reverse
discrimination.That is the situation in Tamil Nadu.

அருண்மொழி said...

ராஜதுரை அவர்களே,

ஒரு வழக்கில் இரு பக்கத்து வக்கீல்கள் குறுக்கு கேள்வி கேட்டு மடக்கலாம், விபரங்களை வெளியே கொண்டு வரலாம். ஆனால் நீதிபதியே வழக்கினை ஒரு பக்கமாக சாய வைக்கும் கேள்விகளை கேட்கலாமா?

உச்ச நீதிமன்ற மகான்கள் தமிழக இடஒதுக்கீடு Fraud என வாக்கு அருளியதால் இக்கேள்வி எழுந்தது.

மணியன் said...

உங்கள் தொடர் பல விதயங்களை தெளிவாக்குவதுடன் நல்ல அலசலாகவும் இருக்கிறது.