உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு மீண்டும் ஒரு பிரச்சினையை அவரைச் சுற்றி உருவாக்கியுள்ளார். இதுவும் பெண்ணுரிமை அமைப்புகளை கோபம் கொள்ளச்செய்யும் ஒரு செயல் என்றாலும், அதிஷ்டவசமாக அநேகரால் கண்டுகொள்ளப்படாமல், வெறும் பத்திரிக்கைச் செய்தியோடு முடிந்து போய் உள்ளது.
1997ம் ஆண்டு இளம் பெண் ஒருவர் மூன்று நபர்களால் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறார். குற்றத்தை விசாரித்த நீதிமன்றம் 10 ஆண்டுகள் தண்டனை விதித்தது. கூட்டு வன்புணர்வுக்கு (Gangrape) குறைந்தபட்ச தண்டனையே 10 ஆண்டுகள். பொதுவாக, தண்டனை சட்டங்களில் அதிகபட்ச தண்டனைதான் குறிப்பிடப்படும். வன்புணர்வு குற்றம் விதிவிலக்கு!
பின்னர் உயர்நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்ய, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நீதிபதிகள் கட்ஜு மற்றும் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதற்குள் 14 ஆண்டுகள் கழிந்து விட்டிருந்தது. பாதிக்கப்பட்டவர் திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயாகியிருந்தார் குற்றவாளிகள் ஏறக்குறைய 31/2 ஆண்டுகள் சிறையில் இருந்திருந்தனர். குற்றவாளிகளுக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் ஏதோ சமரசம் ஏற்ப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
மேற்கண்ட காரணங்களை மட்டும் குறிப்பிட்டு, இந்த வழக்கில் பத்து ஆண்டுகளுக்கு குறைவான தண்டனை வழங்க போதுமான மற்றும் சிறப்பு காரணங்கள் (adequate and special reasons) இருப்பதாக கூறி, குற்றவாளிகள் ஏற்கனவே சிறையில் கழித்த 31/2 ஆண்டுகளை அவர்களுக்கான தண்டனையாக கூறி அவர்களை கட்ஜு விடுவித்துள்ளார்.
கூடுதலாக, குற்றவாளிகள் மூவரும் தலா பாதிக்கப்பட்டவருக்கு ரூ.50,000/- கொடுக்க வேண்டுமென்று கூறியுள்ளார். ஆனால், அவர்கள் கொடுக்காவிட்டால் வருவாய் வசூல் சட்டப்படி வசூல் செய்யப்பட வேண்டுமாம். அதற்குப் பதிலாக உடனடியாக கொடுக்கப்பட்டால் தீர்ப்பு என்றிருந்தால், அங்கேயே கட்டியிருப்பார்கள். இனி, எங்கே போய் அவர்களிடம் வசூல் செய்வது?
வருவாய் வசூல் சட்ட (Revenue Recovery Act) சிக்கல்கள் கட்ஜுவிற்கு தெரிந்திருக்க நியாயமில்லை!
பிரச்னை அதுவல்ல, மாறாக ‘சுமார் பதினைந்து வரிகளுக்குள் முடிந்துவிட்ட ஒரு தீர்ப்பில், கூட்டு வன்புணர்வாளர்களுக்கான தண்டனையை 31/2 வருடங்களாக குறைக்க முடியுமா’ என்பதுதான். தீர்ப்பில் கூறப்பட்ட போதுமான மற்றும் சிறப்பு காரணங்கள் உச்ச நீதிமன்றம் வரும் அனைத்து வன்புணர்வு வழக்குகளிலும் இருக்கும்.
சம்பவம் நடந்து 14 ஆண்டுகள் கடந்து போவதோ பாதிக்கப்பட்டவருக்கு திருமணம் ஆவதோ, அவருக்கு குழந்தைகள் பிறப்பதோ, குற்றவாளிகள் 31/2 ஆண்டுகள் சிறையில் கழிப்பதோ, ஏன் அவர்களுக்குள் சமரசம் ஆவதோ அனைத்து வழக்குகளிலும் உள்ள அம்சம்தான். அப்படியென்றால் அவை எப்படி சிறப்பான காரணங்கள் ஆகும்?
போதுமான காரணம்? நிச்சயமாக கிடையாது.
ஒருவேளை வழக்கில் போதுமான சாட்சிகள் இல்லாது இருக்கலாம். வழக்கை முழுமையாக விசாரித்தால், குற்றவாளிகளை விடுவிக்க வேண்டிய சூழல் இருந்திருக்கலாம். குற்றம் நடைபெற்றதா என்ற சந்தேகம் கூட எழுந்திருக்கலாம். எனவே, குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு பதிலாக, பாதிக்கப்பட்டவருக்கு ஏதேனும் நஷ்ட ஈடு பெற்றுத் தரலாமே என்ற நல்ல எண்ணமும் கட்ஜுவுக்கு இருந்திருக்கலாம்.
ஆனால் இது முறையல்ல. சிரமம் பார்க்காமல் ஐந்து பக்கங்களில் தெளிவான காரணத்தைக் கூறி ஒரு தீர்ப்பினை எழுதியிருக்கலாம். ஆனால் ஐந்து வரிகளில் முடிந்து போன இந்த தீர்ப்பு, மக்களிடையே என்னவிதமான எண்ணத்தை ஏற்ப்படுத்தும்?
‘பணத்தை அட்வான்ஸாக கட்ட வேண்டுமா, அல்லது இன்ஸ்டால்மெண்டில் கட்டினால் போதுமா?’
மதுரை
02/03/11
Showing posts with label Katju. Show all posts
Showing posts with label Katju. Show all posts
1.3.11
3.12.10
திடீர் சைலேந்திரபாபுகள்…
இந்த நிதிபதி எத்தனை லஞ்சம் கொடுத்து, வாங்கி இந்த பதவிக்கு வந்தாரோ!...
என்னைக்கு நாடு உருப்பட போவுதோ??? இந்தமாதிரி நீதிபதி இருந்தா லஞ்சம் வாங்குறதுல இந்திய no 1 ஆய்டும்......
ஐயா, கணம் நீதிபதி அவர்களே, இந்திய குட்டிச்சுவராய் ஆவதற்கு தங்களின் தீர்ப்பு ஒன்றே போதும். இனி அரசு ஊழியர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. நீதியரசர் அந்த அரியணையில் இருந்து கூறுகிற ஒவ்வொரு வார்த்தைகளும் ஒரு தீர்ப்பு என்றே கருதப்படும் என்கிற அடிப்படை விசயமே தெரியாத ஒருவரை அரசு இருத்தி இருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது. நன்றி. வளரட்டும் லஞ்சம்! நாசமாகட்டும் இந்தியா!! நிறையட்டும் உங்கள் கை !!!...
இந்தியா நீதி செத்து விட்டது இரண்டாவது முறையாக 1 . பாப்ரி மஸ்ஜித் வழக்கு 2. லஞ்ச வழக்கு . இந்தியன மானம் எங்க?...
அய்யா, நீதி மான்!!!!!! அவர்களே உங்கள் வீட்டில் முதலில் ரெய்டு நடத்த வேண்டும் அய்யா, எவ்வளவு லஞ்சம் கொடுத்து நீதி மான்!!!!!!! ஆநீர்களோ வெட்கம் கெட்ட தீர்ப்புக்கு அதரவு வேறு? வெட்கம் கெட்ட செயலுக்கு அதரவு வேறு?...
நாடே குட்டிசெவரா போகுதுன்க்ராதுக்கு இது நல்ல உதாரணம். நீதிபதி லஞ்சம் கொடுத்து வந்திருப்பருன்னு தோணுது....
இதை சொல்ல எவ்வளவு லஞ்சம் வாங்கினீங்க ? அப்போ மக்கள் வரி கட்டாமல் இருக்கலாம்னு சொல்லுங்க ? இல்லே அவங்களக்கு சம்பளம் இல்லேன்னு சொல்லுங்க.....
இவரு எங்கியோ நல்ல லஞ்சம் வாங்கறாரு போல. அதா மறைக்க இப்படி ஒரு தீர்ப்பு , மக்களே உஷாரு...
நான் இந்தியன் என்று சொல்வதற்கு வெட்க படுகிறேன். இப்படி ஒரு சட்டம் எந்த நாட்டிலும் இருக்காது. இப்படி ஒரு தீர்ப்பை இந்த உலகத்தில் எந்த ஒரு நீதிபதியும் தரமாட்டார்.
mr judge you are not make country proud there is nothing different between you and terrorist
***
மேற்கண்ட அனைத்து அர்ச்சனைகளுக்கும் உரிய, நீதிபதி தற்பொழுது நீதித்துறையில் லஞ்ச லாவண்யத்தை ஒழிக்க சாட்டையை சுழற்றியிருக்கும் ‘ஹீரோ’ மார்கண்டேய கட்ஜு என்றால் ஆச்சரியமாக இருக்கலாம்.
தமிழகத்தின் முக்கியமான தினசரிகளில் ஒன்றான ‘தினமலர்’ கட்ஜூ அவர்கள் வேடிக்கையாக நீதிமன்றத்தில் கூறிய ‘ஜோக்’கை ஏதோ அவர் கூறிய சேரியமான (serious) கருத்து என்பது போல தனது வாசகர்களுக்கு கடத்த, அந்த பத்திரிக்கையின் ‘படித்த’ ‘வெளிநாடுகளில் வசிக்கும்’ பல்வேறு வாசகர்கள் கூறிய முன்னிகைகளின் சில துளிகள்.
சந்தேகமிருந்தால், ‘அரசு அலுவலகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயம்? சுப்ரீம் கோர்ட் கருத்து’ என்ற இந்த செய்தினை படிக்கவும்.
நன்கு படித்த, கணணி உபயோகித்து செய்தியினைப் படிக்கும் அளவிற்கு வசதியுள்ள வாசகர்களே இப்படியென்றால், உடனடியாக யாரையும் மோகன்ராஜாகவும், சைலேந்திரபாபுவாகவும் மாற்றுவது நமது ஊடகங்களுக்கு எவ்வளவு என்பது புரியலாம்.
மதுரை
03/12/10
1.12.10
ஏன் கூடாது என்கவுண்டர்கள்...
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீதான உச்சநீதிமன்ற நீதிபதியான கட்ஜுவின் பாய்ச்சலை, ’ஜுடீசியல் எனகவுண்டர்’ என்று குறிப்பிட்டதாலோ என்னவோ, கட்ஜூ என் ஹீரோ’ ‘அந்த மாட்டில் தேவையான ஒன்றுதான்’ என்ற எதிர் வினைகள்.
உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு தீர்ப்பினைப் பற்றி கவலைப்படாமல், அதற்கு எதிராக தீர்ப்பு கூறிய பின்னர், அதனை ஏற்றுக் கொள்ளாத மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு, தனது தீர்ப்பில் ‘ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சின் தீர்ப்பு அவருக்கு எதிராக இருப்பினும், நீதிபதி கட்ஜு வேறு பலன்களை எதிர்பார்த்து இப்படி ஒரு தீர்ப்பு எழுதியுள்ளார்’ என்று குறிப்பிட்டிருந்தால், அடுத்த நாள் செய்தித் தாள்களில் இவ்வாறு செய்தி வந்திருக்கும்
‘உச்ச நீதிமன்ற நீதிபதி லஞ்சத்திற்கு மயங்கி ஐந்து நீதிபதிகள் பெஞ்சு தீர்ப்பிற்கு புறம்பாக தீர்ப்பு எழுதியுள்ளார்...மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு கடும் கண்டனம்’
செய்தியினை படிக்கும் வாசகர்களுக்கு, கட்ஜுவையும் தெரியாது. அவர் என்ன தீர்ப்பு கூறினார் என்றும் தெரியாது. ஆனால், ’இவனை எல்லாம் இப்படித்தான் போட்டுத் தள்ளனும். உச்ச நீதிமன்றமா? கொக்கா? என்று கை தட்டியிருப்பார்கள்’
***
கட்ஜூ தனது தீர்ப்பில் மேலும், ‘சில நீதிபதிகள் தங்களது சொந்த பந்தங்களை அதே நீதிமன்றத்தில் (அல்காபாத்) வழக்குரைஞர்களாக பணியாற்ற வைக்கிறார்கள். பணியாற்றத் தொடங்கிய சில வருடங்களிலேயே, நீதிபதிகளின் மகன்களும் உறவினர்களும் கோடீஸ்வரர்களாகி விடுகிறார்கள். பெரிய வீடு, ஆடம்பர கார்கள் மற்றும் அளப்பறிய வங்கிச் சேமிப்பு என சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்’ என்றும் கூறுகிறார்.
இதே கருத்தை பல ஆண்டுகளாக வழக்குரைஞர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். பொது மக்களும் கூறலாம். ஆனால் அவை யாவும் குற்றச்சாட்டுகள். அவ்வளவுதான். அவற்றை ஒருவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது கிடையாது. ஆனால் குற்றச்சாட்டுகள் தீர்ப்பாக உருமாறு முன்னர், அந்த தீர்ப்பு யாருக்கு எதிரானதோ அவரது கருத்து கேட்கப்பட வேண்டும். இல்லை அந்த தீர்ப்பு இல்லாநிலையது (void). ஏனெனில் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அதுவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு இறுதியானது.
நீதிமன்ற தாள்வாரங்களில் பேசப்படும் கிசுகிசுக்களை தனது தீர்ப்பில் கட்ஜு நுழைத்தால், அதுவும் அதிகார துஷ்பிரயோகமே!
***
கட்ஜு, உண்மையிலேயே ஹீரோவாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும். ‘ஏன், தங்கள் பதவிக்கு பெருமை சேர்த்த பல உயர்நீதிமன்ற நீதிபதிகளால் உச்ச நீதிமன்றத்திற்குள் நுழைய முடியவில்லை’ என்பதற்கான காரணத்தை, தனது தீர்ப்பில் அல்ல, தான் அவ்வப் பொழுது எழுதும் பத்திரிக்கை கட்டுரைகளில் தெரிவித்திருக்கலாம்.
சமீபத்தில் ஒரு உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகையில், குறிப்பிட்ட இரு நபர்கள் நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்று கொலேஜியத்தில் பங்கு வகித்த நேர்மையான ஒரு நீதிபதி எழுத்து மூலம் தெரிவித்த எதிர்ப்பினையும் (dissenting note) மீறி அந்த நபர்களை நீதிபதிகளாக எப்படி உச்ச நீதிமன்றம் அனுமதிக்கிறது என்று கேட்டிருக்கலாம்.
இன்று, ‘ராசாவை ஏன் இன்னமும் விசாரிக்கவில்லை’ என்று உறுமும் உச்ச நீதிமன்றம் ‘ஏன் வைப்பு நிதி ஊழலில் சம்பந்தப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதியை விசாரிக்கவில்லை’ என்று மைய புலனாய்வு அமைப்பைப் பார்த்து அன்று உறுமவில்லை என்று விளக்கியிருக்கலாம்.
சாந்தி பூசன், தனக்குத் தெரிந்து எட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்பதோடு நில்லாமல், யார் யார் என்ன என்ன ஊழல் செய்தார்கள் என்ற விபரத்தை சத்திய பிரமாண பத்திரமாக தாக்கல் செய்து ’முடிந்தால் என் மீது அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்து கொள்’ என்று சவால் விட்ட பிறகும் அவரை ஒன்றும் செய்யாமல் உச்ச நீதிமன்றம் பதுங்கி பின் வாங்குவது ஏன் என்று மற்ற நீதிபதிகளிடம் சண்டை பிடித்திருக்கலாம்.
அல்லது, இப்படி வெளிப்படையாக கூறிய பின்னரும் ஏன் அந்த தலைமை நீதிபதிகள் மீது குற்ற வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்று மத்திய அரசை சாடியிருக்கலாம்.
விஜிலன்ஸ் கமிசனர் வழக்கில், மத்திய அரசு வழக்குரைஞர் ‘ இப்படிப் பட்ட பதவி வகிப்பவர்களுக்கு ‘மாசற்ற் நேர்மை’ (impeccable integrity) இருக்க வேண்டுமென்று கூறினால், அதே அளவுகோலில் நீதிபதி பதவி வகிப்பவர்களையும் அளக்க வேண்டியிருக்கும்’ என்று பூடகமாக ஒரு மிரட்டல் விட்டதை ஏதோ அவர் கூறியது காதிலேயே விழவில்லை என்பது போல உச்ச நீதிமன்றம் நடிப்பது ஏன்? என்பதை வியந்திருக்கலாம்.
’மிஸ்டர் அட்டார்னி ஜெனரல், நாங்கள் அப்பழுக்கில்லாதவர்கள். வேண்டுமென்றால், எங்களை சோதித்துப் பாருங்கள்’ என்று எந்த நீதிபதியிடமிருந்தும் குரல் வரவில்லையே’ என்று வருத்தப்பட்டிருக்கலாம்.
இந்த கிருஷ்ண ஐயர் வேறு, சமய சந்தர்ப்பம் தெரியாமல், ’அட்டார்னி ஜெனரல் எப்படி அப்படி சொல்லப் போயிற்று, விடாதே அவரை ஒன்றில் இரண்டு பார்த்து விடு’ ஹிந்துவில் கட்டுரை எழுதி உசுப்பி விட்டுக் கொண்டிருக்கிறார். அவரிடமாவது ‘ஐயா நாங்க கைப்புள்ள... எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது’ என்று கொஞ்சம் அழுதிருக்கலாம்...
இதையெல்லாம், செய்திருந்தா அது ஹீரோயிசம்!
மதுரை
02/12/10
உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு தீர்ப்பினைப் பற்றி கவலைப்படாமல், அதற்கு எதிராக தீர்ப்பு கூறிய பின்னர், அதனை ஏற்றுக் கொள்ளாத மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு, தனது தீர்ப்பில் ‘ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சின் தீர்ப்பு அவருக்கு எதிராக இருப்பினும், நீதிபதி கட்ஜு வேறு பலன்களை எதிர்பார்த்து இப்படி ஒரு தீர்ப்பு எழுதியுள்ளார்’ என்று குறிப்பிட்டிருந்தால், அடுத்த நாள் செய்தித் தாள்களில் இவ்வாறு செய்தி வந்திருக்கும்
‘உச்ச நீதிமன்ற நீதிபதி லஞ்சத்திற்கு மயங்கி ஐந்து நீதிபதிகள் பெஞ்சு தீர்ப்பிற்கு புறம்பாக தீர்ப்பு எழுதியுள்ளார்...மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு கடும் கண்டனம்’
செய்தியினை படிக்கும் வாசகர்களுக்கு, கட்ஜுவையும் தெரியாது. அவர் என்ன தீர்ப்பு கூறினார் என்றும் தெரியாது. ஆனால், ’இவனை எல்லாம் இப்படித்தான் போட்டுத் தள்ளனும். உச்ச நீதிமன்றமா? கொக்கா? என்று கை தட்டியிருப்பார்கள்’
***
கட்ஜூ தனது தீர்ப்பில் மேலும், ‘சில நீதிபதிகள் தங்களது சொந்த பந்தங்களை அதே நீதிமன்றத்தில் (அல்காபாத்) வழக்குரைஞர்களாக பணியாற்ற வைக்கிறார்கள். பணியாற்றத் தொடங்கிய சில வருடங்களிலேயே, நீதிபதிகளின் மகன்களும் உறவினர்களும் கோடீஸ்வரர்களாகி விடுகிறார்கள். பெரிய வீடு, ஆடம்பர கார்கள் மற்றும் அளப்பறிய வங்கிச் சேமிப்பு என சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்’ என்றும் கூறுகிறார்.
இதே கருத்தை பல ஆண்டுகளாக வழக்குரைஞர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். பொது மக்களும் கூறலாம். ஆனால் அவை யாவும் குற்றச்சாட்டுகள். அவ்வளவுதான். அவற்றை ஒருவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது கிடையாது. ஆனால் குற்றச்சாட்டுகள் தீர்ப்பாக உருமாறு முன்னர், அந்த தீர்ப்பு யாருக்கு எதிரானதோ அவரது கருத்து கேட்கப்பட வேண்டும். இல்லை அந்த தீர்ப்பு இல்லாநிலையது (void). ஏனெனில் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அதுவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு இறுதியானது.
நீதிமன்ற தாள்வாரங்களில் பேசப்படும் கிசுகிசுக்களை தனது தீர்ப்பில் கட்ஜு நுழைத்தால், அதுவும் அதிகார துஷ்பிரயோகமே!
***
கட்ஜு, உண்மையிலேயே ஹீரோவாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும். ‘ஏன், தங்கள் பதவிக்கு பெருமை சேர்த்த பல உயர்நீதிமன்ற நீதிபதிகளால் உச்ச நீதிமன்றத்திற்குள் நுழைய முடியவில்லை’ என்பதற்கான காரணத்தை, தனது தீர்ப்பில் அல்ல, தான் அவ்வப் பொழுது எழுதும் பத்திரிக்கை கட்டுரைகளில் தெரிவித்திருக்கலாம்.
சமீபத்தில் ஒரு உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகையில், குறிப்பிட்ட இரு நபர்கள் நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்று கொலேஜியத்தில் பங்கு வகித்த நேர்மையான ஒரு நீதிபதி எழுத்து மூலம் தெரிவித்த எதிர்ப்பினையும் (dissenting note) மீறி அந்த நபர்களை நீதிபதிகளாக எப்படி உச்ச நீதிமன்றம் அனுமதிக்கிறது என்று கேட்டிருக்கலாம்.
இன்று, ‘ராசாவை ஏன் இன்னமும் விசாரிக்கவில்லை’ என்று உறுமும் உச்ச நீதிமன்றம் ‘ஏன் வைப்பு நிதி ஊழலில் சம்பந்தப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதியை விசாரிக்கவில்லை’ என்று மைய புலனாய்வு அமைப்பைப் பார்த்து அன்று உறுமவில்லை என்று விளக்கியிருக்கலாம்.
சாந்தி பூசன், தனக்குத் தெரிந்து எட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்பதோடு நில்லாமல், யார் யார் என்ன என்ன ஊழல் செய்தார்கள் என்ற விபரத்தை சத்திய பிரமாண பத்திரமாக தாக்கல் செய்து ’முடிந்தால் என் மீது அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்து கொள்’ என்று சவால் விட்ட பிறகும் அவரை ஒன்றும் செய்யாமல் உச்ச நீதிமன்றம் பதுங்கி பின் வாங்குவது ஏன் என்று மற்ற நீதிபதிகளிடம் சண்டை பிடித்திருக்கலாம்.
அல்லது, இப்படி வெளிப்படையாக கூறிய பின்னரும் ஏன் அந்த தலைமை நீதிபதிகள் மீது குற்ற வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்று மத்திய அரசை சாடியிருக்கலாம்.
விஜிலன்ஸ் கமிசனர் வழக்கில், மத்திய அரசு வழக்குரைஞர் ‘ இப்படிப் பட்ட பதவி வகிப்பவர்களுக்கு ‘மாசற்ற் நேர்மை’ (impeccable integrity) இருக்க வேண்டுமென்று கூறினால், அதே அளவுகோலில் நீதிபதி பதவி வகிப்பவர்களையும் அளக்க வேண்டியிருக்கும்’ என்று பூடகமாக ஒரு மிரட்டல் விட்டதை ஏதோ அவர் கூறியது காதிலேயே விழவில்லை என்பது போல உச்ச நீதிமன்றம் நடிப்பது ஏன்? என்பதை வியந்திருக்கலாம்.
’மிஸ்டர் அட்டார்னி ஜெனரல், நாங்கள் அப்பழுக்கில்லாதவர்கள். வேண்டுமென்றால், எங்களை சோதித்துப் பாருங்கள்’ என்று எந்த நீதிபதியிடமிருந்தும் குரல் வரவில்லையே’ என்று வருத்தப்பட்டிருக்கலாம்.
இந்த கிருஷ்ண ஐயர் வேறு, சமய சந்தர்ப்பம் தெரியாமல், ’அட்டார்னி ஜெனரல் எப்படி அப்படி சொல்லப் போயிற்று, விடாதே அவரை ஒன்றில் இரண்டு பார்த்து விடு’ ஹிந்துவில் கட்டுரை எழுதி உசுப்பி விட்டுக் கொண்டிருக்கிறார். அவரிடமாவது ‘ஐயா நாங்க கைப்புள்ள... எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது’ என்று கொஞ்சம் அழுதிருக்கலாம்...
இதையெல்லாம், செய்திருந்தா அது ஹீரோயிசம்!
மதுரை
02/12/10
28.11.10
கட்ஜூவின் என்கவுண்டர்!
உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ நமது உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த பொழுது, எனது மூத்த வழக்குரைஞர், ’அவரது தீர்ப்புகள் செல்லுமா?’ என்று ஒரு சந்தேகத்தை எழுப்பினார். ‘ஏன் சார்?’ என்றால்…
‘அவர்தான் பதினாறு வயசை தாண்டவில்லையே. மைனர் சொன்ன தீர்ப்பு செல்லுமா?’ என்றாரே பார்க்கலாம்.
18 வயதுக்குள் செய்யப்படும் செயல்கள் குற்றமாகாது என்ற தைரியத்தில்தான், கட்ஜூ அவர்கள் அலகபாத் நீதிமன்றத்தை அவமதிக்க துணிந்துள்ளார் போல!
மூன்று நாட்களுக்கு முன்னர் தான் கூறிய தீர்ப்பு ஒன்றில், அலகபாத் உயர்நீதிமன்ற தனி நீதிபதி கூறிய தீர்ப்பு சட்டம் சாராத ‘வேறு பலன்களுக்காக’ கூறப்பட்டுள்ளதாக தனது தீர்ப்பில் குற்றம்சாட்டியுள்ளார் (as these interim orders are clearly passed on extraneous consideration).
ஒரு தீர்ப்பினைப் பற்றி சட்டரீதியில் விமர்சிக்கலாம். சட்டம் சாரத வகையில் கூட குறை கூறலாம். ஆனால் அந்த தீர்ப்பினை நீதிபதி வேறு பலன்களுக்காக கூறியுள்ளார் என்று கூறுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இந்த அடிப்படையில் கட்ஜூ கூறியவை, ஒரு தீர்ப்பில் கூறப்பட்டிருப்பினும், நீதிமன்ற அவமதிப்பே!
தனி நீதிபதியில் உத்தரவு சட்டப்படி சரியான ஒரு உத்தரவா இல்லையா என்ற மேல் முறையீட்டில், தீர்ப்பினை பற்றி எவ்விதமான விமர்சனத்தையும் கூற கட்ஜுவிற்கு உரிமை உண்டு. ஆனால், உத்தரவு வேறு பலன்களுக்காக கூறப்பட்டுள்ளதாக கூறியது, நீதித்துறையின் அனைத்து நெறிமுறைகளையும் மீறிய ஒரு செயல்.
ஒரு நீதிபதி, அதுவும் பாராளுமன்ற ஒட்டெடுப்பு முறை மூலமே பதவி நீக்கம் செய்யப்படத்தக்க ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி வேறு பலன்களுக்காக தீர்ப்பு கூறுவது என்பது, பதவி நீக்கம் செய்யப்பட வேண்டிய அளவுக்கு முறை தவறிய செயல். மட்டுமல்லாமல் அந்த நீதிபதியை சிறையில் அடைக்க வேண்டிய குற்றச் செயல். ஆனால், கட்ஜு, நீதிமன்ற நடைமுறை, இயற்கை நீதி போன்றவை இந்த நாட்டின் நீதிதுறையின் ஆதர்ச விதிகள் என்பதையெல்லாம் மறந்து, மிகச் சாதாரணமாக ஒருவரை குற்றவாளி என்று கூறியுள்ளார். இந்திய அரசியலமைப்பில் தான் வகிக்கும் மிக உயர்ந்த ஒரு பொறுப்பின் முக்கியத்துவத்தையும் தனது தீர்ப்பில் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும், 100 கோடி மக்கள் தொகையுள்ள இந்த நாட்டின் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும் என்பது புரியாமல் செயல்பட்டுள்ளார்.
இந்த நீதித்துறை தாக்குதலின் ‘Judicial Encounter’ அதிர்ச்சியிலிருந்து யாரும் மீளவில்லை போல. மூன்று நாட்களாகி விட்டன. இனிதான் பார்க்க வேண்டும். உச்ச நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது என்பதை!
***
இவ்வாறு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது, கட்ஜுவுக்கு ஒன்றும் புதிதல்ல. தனது அளவுக்கு மீறிய ஆர்வத்தால் இப்படித்தான் வார்த்தைகளை கொட்டி, பின் மாட்டிக் கொள்வார்.
கடந்த மாதம்தான், திருமணம் இல்லாமலேயே இருவர் சேர்ந்து வாழும் முறை பற்றிய தீர்ப்பில், வைப்பு (keep) என்ற வார்த்தையினை பயன்படுத்தி வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங்கிடம் வாங்கி கட்டினார். (If a man has a `keep' whom he 1maintains financially and uses mainly for sexual purpose and/or as a servant it would not, in our opinion, be a relationship in the nature of marriage)
இங்கே ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். கட்ஜு எப்படி அப்பழுக்கில்லாத நேர்மையானவரோ அதே போன்று, பெண்களிடம் பரிவு மிக்கவர்.
***
நிர்வாகம் அதன் வேலையை செய்யட்டும். நீதிமன்றங்கள் அதனுடைய வேலையை மட்டும் செய்யட்டும்’ என்பதில் கட்ஜு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர். நிர்வாகத்திலோ அல்லது சட்டமியற்றுதலிலோ நீதிமன்றங்கள் தலையிடுவதைக் கண்டால் அவருக்கு பொறுக்காது.
அந்த வேகத்தில், நுகர்வோர் நீதிமன்றங்கள் தேவையான அளவிற்கு உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய உயர்நீதிமன்ற தீர்ப்பினை தள்ளுபடி செய்கையில், உயர்நீதிமன்றத்தோடு நிற்காமல், இடைக்கால உத்தரவு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் தனது தீர்ப்பில் ஒரு கை பார்த்தார். கூட இருந்த நீதிபதி பயந்து போய் தனியே தீர்ப்பு எழுதி, அதோடு நிற்காமல், ‘For the views been taken herein, I regret to express my inability to agree with Brother Katju, J. in regard to the criticisms of various orders passed in this case itself by other Benches. I am of the opinion that it is wholly inappropriate to do so. One Bench of this Court, it is trite, does not sit in appeal over the other Bench particularly when it is a coordinate Bench. It is equally inappropriate for us to express total disagreement in the same matter as also in similar matters with the directions and observations made by the larger Bench. Doctrine of judicial restraint, in my opinion, applies even in this realm. We should not forget other doctrines which are equally developed viz., Judicial Discipline and Respect for the Brother Judges’ State of UP Vs. Jeet Bisht 2007 (6) SCC 586’ என்று அதே தீர்ப்பில் கட்ஜுவையும் விமர்சிக்க வேண்டியதாயிற்று.
***
ஆயினும், மேற்கண்ட தீர்ப்பு வெளிவந்த சில நாட்களில், பல்வேறு குற்றச் செயல்களுக்காக குற்றம் சுமத்தப்பட்ட பெண்கள், சிறுவர்கள் ஆகியோருக்கு மறுவாழ்வு கொடுப்பது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநல வழக்கினை வேறு இரு நீதிபதிகள் ஏற்க மறுத்து, அவ்வகையான வழக்குகளை நீதிமன்றம் விசாரிக்கலாமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றத்தை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்தப் பிரச்னை பெரிதாக கிளம்ப தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், ‘பொதுநல வழக்குகள் தாக்கல் செய்ய தடை இல்லை’ என்று அறிவிக்க வேண்டியதாயிற்று.
***
ஆயினும் கட்ஜுவை ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்று காத்திருந்தவர்களுக்கு, அடுத்த வருடமே ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் தற்காலிக பணியாளர்களாக வேலைக்கு சேர்பவர்களை பின்னர் நிரந்தரமாக்குதல் கூடாது என்று முன்பு உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு உமா தேவி (JT 2006 (4) SC 420) என்ற வழக்கில் ஒரு தீர்ப்பு கூறியிருந்தது.
ஆனால், பின்னர் கட்ஜுவும் மற்றொரு நீதிபதியும் இருக்கும் இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு முன்பு பணி நிரந்தரம் சம்பந்தப்பட்ட மற்றொரு வழக்கு வர கட்ஜு பணி நிரந்தரம் செய்யலாம் என்பதோடு நிற்காமல், உமா தேவியின் வழக்கு யூக்லிட்டின் தேற்றம் போல அப்படியே கடைபிடிக்க வேண்டியதில்லை’ என்றும் கூறினார் (we find that often Uma Devi's case (supra) is being applied by Courts mechanically as if it were a Euclid's formula without seeing the facts of a particular case. பூரன் சந்திர பாண்டே வழக்கு 2007 (11) SCC 92)
ஒரே வருடத்தில் மற்றொரு நிரந்தரமாக்குதல் பிரச்னை உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு முன்பு வந்த பொழுது (தயானந் வழக்கு 2008 (10) SCC 1) பூரன் சந்திர பாண்டே வழக்கில் கட்ஜூவின் தீர்ப்பினை வெறுமே ஒரு கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, மற்ற உயர்நீதிமன்றங்களை கட்டுப்படுத்தும் ஒரு முன்தீர்ப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தீர்ப்பு கூறப்பட்டது (In the light of what has been stated above, we deem it proper to clarify that the comments and observations made by the two-Judges Bench in UP State Electricity Board vs. Pooran Chandra Pandey (supra) should be read as obiter and the same should neither be treated as binding by the High Courts, Tribunals and other judicial foras nor thwe find that often Uma Devi's case (supra) is being applied by Courts mechanically as if it were a Euclid's formula without seeing the facts of a particular case)
முக்கியமாக இந்த தீர்ப்பில் நீதிபதிகள், மற்ற உயர்நீதிமன்றங்களுக்கு கூறுவது போல கட்ஜுவிற்கு ‘நீதித்துறையின் மாண்பினை’ போற்றுவது குறித்து கடுமையான வார்த்தைகளில் அறிவுறுத்தியிருந்தனர்.
வேடிக்கையான அம்சம் என்னவென்றால், நீதித்துறையின் ஒழுக்கத்தை பேண வேண்டியது குறித்து அறிவுறுத்த மூன்று நீதிபதிகள் பயன்படுத்திய வரிகள், ஜீட் பிஸ்ட் வழக்கில் கட்ஜு கூறிய தீர்ப்பிலுள்ள வரிகள்!
***
இந்த முறை கட்ஜு சற்று அகல கால் வைத்துள்ளார்...யார் காலை தட்டி விடப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.
மதுரை
28/11/10
‘அவர்தான் பதினாறு வயசை தாண்டவில்லையே. மைனர் சொன்ன தீர்ப்பு செல்லுமா?’ என்றாரே பார்க்கலாம்.
18 வயதுக்குள் செய்யப்படும் செயல்கள் குற்றமாகாது என்ற தைரியத்தில்தான், கட்ஜூ அவர்கள் அலகபாத் நீதிமன்றத்தை அவமதிக்க துணிந்துள்ளார் போல!
மூன்று நாட்களுக்கு முன்னர் தான் கூறிய தீர்ப்பு ஒன்றில், அலகபாத் உயர்நீதிமன்ற தனி நீதிபதி கூறிய தீர்ப்பு சட்டம் சாராத ‘வேறு பலன்களுக்காக’ கூறப்பட்டுள்ளதாக தனது தீர்ப்பில் குற்றம்சாட்டியுள்ளார் (as these interim orders are clearly passed on extraneous consideration).
ஒரு தீர்ப்பினைப் பற்றி சட்டரீதியில் விமர்சிக்கலாம். சட்டம் சாரத வகையில் கூட குறை கூறலாம். ஆனால் அந்த தீர்ப்பினை நீதிபதி வேறு பலன்களுக்காக கூறியுள்ளார் என்று கூறுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இந்த அடிப்படையில் கட்ஜூ கூறியவை, ஒரு தீர்ப்பில் கூறப்பட்டிருப்பினும், நீதிமன்ற அவமதிப்பே!
தனி நீதிபதியில் உத்தரவு சட்டப்படி சரியான ஒரு உத்தரவா இல்லையா என்ற மேல் முறையீட்டில், தீர்ப்பினை பற்றி எவ்விதமான விமர்சனத்தையும் கூற கட்ஜுவிற்கு உரிமை உண்டு. ஆனால், உத்தரவு வேறு பலன்களுக்காக கூறப்பட்டுள்ளதாக கூறியது, நீதித்துறையின் அனைத்து நெறிமுறைகளையும் மீறிய ஒரு செயல்.
ஒரு நீதிபதி, அதுவும் பாராளுமன்ற ஒட்டெடுப்பு முறை மூலமே பதவி நீக்கம் செய்யப்படத்தக்க ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி வேறு பலன்களுக்காக தீர்ப்பு கூறுவது என்பது, பதவி நீக்கம் செய்யப்பட வேண்டிய அளவுக்கு முறை தவறிய செயல். மட்டுமல்லாமல் அந்த நீதிபதியை சிறையில் அடைக்க வேண்டிய குற்றச் செயல். ஆனால், கட்ஜு, நீதிமன்ற நடைமுறை, இயற்கை நீதி போன்றவை இந்த நாட்டின் நீதிதுறையின் ஆதர்ச விதிகள் என்பதையெல்லாம் மறந்து, மிகச் சாதாரணமாக ஒருவரை குற்றவாளி என்று கூறியுள்ளார். இந்திய அரசியலமைப்பில் தான் வகிக்கும் மிக உயர்ந்த ஒரு பொறுப்பின் முக்கியத்துவத்தையும் தனது தீர்ப்பில் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும், 100 கோடி மக்கள் தொகையுள்ள இந்த நாட்டின் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும் என்பது புரியாமல் செயல்பட்டுள்ளார்.
இந்த நீதித்துறை தாக்குதலின் ‘Judicial Encounter’ அதிர்ச்சியிலிருந்து யாரும் மீளவில்லை போல. மூன்று நாட்களாகி விட்டன. இனிதான் பார்க்க வேண்டும். உச்ச நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது என்பதை!
***
இவ்வாறு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது, கட்ஜுவுக்கு ஒன்றும் புதிதல்ல. தனது அளவுக்கு மீறிய ஆர்வத்தால் இப்படித்தான் வார்த்தைகளை கொட்டி, பின் மாட்டிக் கொள்வார்.
கடந்த மாதம்தான், திருமணம் இல்லாமலேயே இருவர் சேர்ந்து வாழும் முறை பற்றிய தீர்ப்பில், வைப்பு (keep) என்ற வார்த்தையினை பயன்படுத்தி வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங்கிடம் வாங்கி கட்டினார். (If a man has a `keep' whom he 1maintains financially and uses mainly for sexual purpose and/or as a servant it would not, in our opinion, be a relationship in the nature of marriage)
இங்கே ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். கட்ஜு எப்படி அப்பழுக்கில்லாத நேர்மையானவரோ அதே போன்று, பெண்களிடம் பரிவு மிக்கவர்.
***
நிர்வாகம் அதன் வேலையை செய்யட்டும். நீதிமன்றங்கள் அதனுடைய வேலையை மட்டும் செய்யட்டும்’ என்பதில் கட்ஜு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர். நிர்வாகத்திலோ அல்லது சட்டமியற்றுதலிலோ நீதிமன்றங்கள் தலையிடுவதைக் கண்டால் அவருக்கு பொறுக்காது.
அந்த வேகத்தில், நுகர்வோர் நீதிமன்றங்கள் தேவையான அளவிற்கு உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய உயர்நீதிமன்ற தீர்ப்பினை தள்ளுபடி செய்கையில், உயர்நீதிமன்றத்தோடு நிற்காமல், இடைக்கால உத்தரவு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் தனது தீர்ப்பில் ஒரு கை பார்த்தார். கூட இருந்த நீதிபதி பயந்து போய் தனியே தீர்ப்பு எழுதி, அதோடு நிற்காமல், ‘For the views been taken herein, I regret to express my inability to agree with Brother Katju, J. in regard to the criticisms of various orders passed in this case itself by other Benches. I am of the opinion that it is wholly inappropriate to do so. One Bench of this Court, it is trite, does not sit in appeal over the other Bench particularly when it is a coordinate Bench. It is equally inappropriate for us to express total disagreement in the same matter as also in similar matters with the directions and observations made by the larger Bench. Doctrine of judicial restraint, in my opinion, applies even in this realm. We should not forget other doctrines which are equally developed viz., Judicial Discipline and Respect for the Brother Judges’ State of UP Vs. Jeet Bisht 2007 (6) SCC 586’ என்று அதே தீர்ப்பில் கட்ஜுவையும் விமர்சிக்க வேண்டியதாயிற்று.
***
ஆயினும், மேற்கண்ட தீர்ப்பு வெளிவந்த சில நாட்களில், பல்வேறு குற்றச் செயல்களுக்காக குற்றம் சுமத்தப்பட்ட பெண்கள், சிறுவர்கள் ஆகியோருக்கு மறுவாழ்வு கொடுப்பது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநல வழக்கினை வேறு இரு நீதிபதிகள் ஏற்க மறுத்து, அவ்வகையான வழக்குகளை நீதிமன்றம் விசாரிக்கலாமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றத்தை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்தப் பிரச்னை பெரிதாக கிளம்ப தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், ‘பொதுநல வழக்குகள் தாக்கல் செய்ய தடை இல்லை’ என்று அறிவிக்க வேண்டியதாயிற்று.
***
ஆயினும் கட்ஜுவை ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்று காத்திருந்தவர்களுக்கு, அடுத்த வருடமே ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் தற்காலிக பணியாளர்களாக வேலைக்கு சேர்பவர்களை பின்னர் நிரந்தரமாக்குதல் கூடாது என்று முன்பு உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு உமா தேவி (JT 2006 (4) SC 420) என்ற வழக்கில் ஒரு தீர்ப்பு கூறியிருந்தது.
ஆனால், பின்னர் கட்ஜுவும் மற்றொரு நீதிபதியும் இருக்கும் இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு முன்பு பணி நிரந்தரம் சம்பந்தப்பட்ட மற்றொரு வழக்கு வர கட்ஜு பணி நிரந்தரம் செய்யலாம் என்பதோடு நிற்காமல், உமா தேவியின் வழக்கு யூக்லிட்டின் தேற்றம் போல அப்படியே கடைபிடிக்க வேண்டியதில்லை’ என்றும் கூறினார் (we find that often Uma Devi's case (supra) is being applied by Courts mechanically as if it were a Euclid's formula without seeing the facts of a particular case. பூரன் சந்திர பாண்டே வழக்கு 2007 (11) SCC 92)
ஒரே வருடத்தில் மற்றொரு நிரந்தரமாக்குதல் பிரச்னை உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு முன்பு வந்த பொழுது (தயானந் வழக்கு 2008 (10) SCC 1) பூரன் சந்திர பாண்டே வழக்கில் கட்ஜூவின் தீர்ப்பினை வெறுமே ஒரு கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, மற்ற உயர்நீதிமன்றங்களை கட்டுப்படுத்தும் ஒரு முன்தீர்ப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தீர்ப்பு கூறப்பட்டது (In the light of what has been stated above, we deem it proper to clarify that the comments and observations made by the two-Judges Bench in UP State Electricity Board vs. Pooran Chandra Pandey (supra) should be read as obiter and the same should neither be treated as binding by the High Courts, Tribunals and other judicial foras nor thwe find that often Uma Devi's case (supra) is being applied by Courts mechanically as if it were a Euclid's formula without seeing the facts of a particular case)
முக்கியமாக இந்த தீர்ப்பில் நீதிபதிகள், மற்ற உயர்நீதிமன்றங்களுக்கு கூறுவது போல கட்ஜுவிற்கு ‘நீதித்துறையின் மாண்பினை’ போற்றுவது குறித்து கடுமையான வார்த்தைகளில் அறிவுறுத்தியிருந்தனர்.
வேடிக்கையான அம்சம் என்னவென்றால், நீதித்துறையின் ஒழுக்கத்தை பேண வேண்டியது குறித்து அறிவுறுத்த மூன்று நீதிபதிகள் பயன்படுத்திய வரிகள், ஜீட் பிஸ்ட் வழக்கில் கட்ஜு கூறிய தீர்ப்பிலுள்ள வரிகள்!
***
இந்த முறை கட்ஜு சற்று அகல கால் வைத்துள்ளார்...யார் காலை தட்டி விடப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.
மதுரை
28/11/10
