"ஒரு சாதாரண மன்னிப்பு போதும். கடைசி தடவையும் இதைத்தான் கூறினோம். நாங்கள் கூறுவதை யோசித்துப் பாருங்கள்”
இப்படி, ‘ஒரு மன்னிப்பை பெயருக்கு நீங்கள் கேட்டுவிட்டால், நாங்களும் இத்துடன் பிரச்னையை முடித்துக் கொள்வோமே’ என்று இறைஞ்சிக் கொண்டிருப்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகள்! இறைஞ்சப்படும் நபர் ‘வழக்குரைஞர் பிரசாந்த் பூசன்’. முன்னாள் சட்ட அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான சாந்தி பூசனின் மகன்!!
இப்படி நடக்கும் என்பது நான் முன்பே அறிந்திருந்ததுதான்.
பிரசாந்த் பூசன், நீதித்துறையில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடி வருபவர். தெஹல்கா நாளிதழுக்கு அளித்த பேட்டி ஓன்றில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தானறிந்தவரை 8 நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்று பேட்டியளித்தார். உடனே உச்ச நீதிமன்றத்தின் செல்லப்பிள்ளையான ஹரீஷ் சால்வே, பிரசாந்த் பூசன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என்று முறையீட, விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் உச்ச நீதிமன்றம் பிரசாந்த் பூசன் மீது அவமதிப்பு வழக்கு (criminal contempt) தொடர்ந்தது.
வழக்குரைஞர் தொழில் தர்மங்களை (Professional Ethics) காற்றில் பறக்கவிடும் ஹரீஷ் சால்வேயா என்னைப் பற்றி குறை கூறுவது என்று வெகுண்டெழுந்த பிரசாந்த் பூசன், நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் (affidavit) ஹரீஷ் சால்வேயின் யோக்கியதையை வெளுத்துக் கட்டினார்.
உச்ச நீதிமன்றத்திற்கு அப்பொழுதுதான், தான் பிடித்திருப்பது புலி வால் என்பது புரிய ஆரம்பித்தது. ஆனால், வேறு எதுவும் செய்வதற்கு முன்பாக நடந்ததுதான் வேடிக்கை!
'என் மகனையா குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறீர்கள்?' என்று பொங்கி எழுந்த சாந்தி பூசன், ‘அவன் என்ன 8 தலைமை நீதிபதிகள் என்றுதானே கூறினான். இந்தா புடித்துக் கொள்! இந்த இந்த தலைமை நீதிபதி, இன்ன இன்ன ஊழல் புரிந்தார் என்று ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்து...முடிந்தால் என் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்து பார்’ என்று உச்ச நீதிமன்றத்திற்கு பகிரங்கமாக சவால் விடுத்தார்.
"இது என்னடா குட்டி எட்டடி பாய்ந்தால், தாய் பதினாறு அடி பாய்கிறது’ என்று அஞ்சிய நீதிபதிகள்...சாந்தி பூசன் இப்படி ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்து தங்களுக்கு சவால் விட்டதை கண்டு கொள்ளாதது மாதிரி, பிரசாந்த் பூசனைப் பார்த்து கெஞ்சிக் கொண்டு இருக்கிறார்கள்.
***
நேற்று நீதிபதிகள் பிரசாந்த் பூசனின் வழக்குரைஞரான ராம் ஜேத்மலானியிடம் இவ்வாறு கெஞ்சிக் கொண்டிருந்த பொழுது கூட சாந்தி பூசன், என் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்ற எனது மனுவை விசாரிக்க வேண்டும் என்று கேட்ட பொழுது நீதிபதி கபீர், ‘அதெல்லாம் தேவையில்லை’ என்று பூசி மெழுகி விட்டார்.
ஜேத்மலானியும் தன் பங்குக்கு, ‘பூசனின் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எவ்விதமான மறுப்பும் இல்லை. எனவே அவர் உண்மை என நம்பி கூறியவை குறித்து அவமதிப்பு வழக்கு தொடர முடியாது’ என்று வாதிட வழக்கு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
***
போன வாரம்தான் தலைமை கண்காணிப்பாளர் (Chief Vigilence Commissioner) மாசற்ற நேர்மையானவராக இருக்க வேண்டும் என்று உறுமிய பொழுது, அரசு தலைமை வழக்குரைஞர் ‘அப்படியானால், நீதிபதிகள் நியமனத்தையும் அதே அளவுகோலில் அளக்க நேரிடும்’ என்று ஏறக்குறைய ஒரு மிரட்டலை விடுத்தார்.
எந்த நீதிபதியும், ‘பிரச்னை இல்லை. எங்களையும் மாசற்ற நேர்மை (impeccable integrity) என்ற அளவு கோலில் அளக்கலாம்’ என்று தலைமை வழக்குரைஞரின் சவாலை ஏற்றுக் கொள்ளவில்லை. முன்னாள் நீதிபதி கிருஷண ஐயர்தான், தலைமை வழக்குரைஞர் எப்படி அவ்வாறு கூறப்போயிற்று என்று ஹிந்துவில் எழுத, தலைமை வழக்குரைஞர் தான் ‘அப்படியொரு அர்த்தத்தில் கூறவில்லை’ என்று ஒரு விளக்கமளித்தார்.
***
சமீபத்தில்தான், ஜேத்மலானி உச்ச நீதிமன்றத்தில் வேறு ஒரு குண்டினை வீசினார். குஜராத் படுகொலைகள் சம்பந்தமான விசாரணை குறித்து உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவினை கூறியிருந்தது. ஆனால் உத்தரவினை கூறிய நீதிபதி ‘வைப்பு நிதி ஊழலில்’ (Provident Fund Scam) சம்பந்தப்பட்டவர் என்று பரவலான பேச்சு இருந்தது. பின்னர் அந்த நீதிபதி ஒய்வு பெற்று விட்டார். ஆயினும் குஜராத் வழக்கு எடுத்துக் கொள்ளப்படுகையில், ஜேத்மலானி, ‘சிபிஐ விசாரணை வளையத்திற்குள் இருக்கும் ஒரு நீதிபதி, சிபிஐ சம்பந்தப்பட்ட வழக்கில் கூறிய தீர்ப்பு செல்லாது’ என்று ஒரே போடாக போட்டார்.
இந்த தொடர் தாக்குதல்களில் உச்ச நீதிமன்றத்தின் மாண்பு (dignity) வெலவெலத்துப் போயிருக்கிறது என்பதுதான் உண்மை.
சாந்தி பூசனின் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டவைகளுக்கு எவ்வித மறுப்பும் இல்லை. அவை உண்மையெனில், குற்றம் சாட்டப்பட்ட தலைமை நீதிபதிகள் மீது குற்ற வழக்கு தொடரப்பட வேண்டும். உண்மை இல்லை எனில் சாந்தி பூசன் மீது குற்ற வழக்கு தொடரப்பட வேண்டும்.
"ராசாவை ஏன் இன்னமும் விசாரிக்கவில்லை’ என்று உறுமும் உச்ச நீதிமன்றம், ‘ஏன் அந்த எட்டு தலைமை நீதிபதிகள் மீது இன்னமும் குற்ற வழக்கு தொடரப்படவில்லை’ என்று உறுமும் நாள் வந்தால்தான், அந்த மாண்பு காப்பாற்றப்படும்.
கவனிக்கவும், ஊழல்வாதிகள் என்று குறிப்பிடப்படுவது, எட்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்ல. எட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள்!! நூறு கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டுக்கான தலைமை நீதிபதிகளின் யோக்கியதையே இப்படி என்றால், மற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள்......உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், குற்றவியல் நடுவர்கள் (Judicial Magistrates) ஆகியோரின் நேர்மை?
ஆண்டவன் என்று ஒருவன் இருந்தால் அவன் இந்த நாட்டைக் காப்பாற்றட்டும்
மதுரை
08/12/10
Showing posts with label Corruption. Show all posts
Showing posts with label Corruption. Show all posts
1.12.10
ஏன் கூடாது என்கவுண்டர்கள்...
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீதான உச்சநீதிமன்ற நீதிபதியான கட்ஜுவின் பாய்ச்சலை, ’ஜுடீசியல் எனகவுண்டர்’ என்று குறிப்பிட்டதாலோ என்னவோ, கட்ஜூ என் ஹீரோ’ ‘அந்த மாட்டில் தேவையான ஒன்றுதான்’ என்ற எதிர் வினைகள்.
உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு தீர்ப்பினைப் பற்றி கவலைப்படாமல், அதற்கு எதிராக தீர்ப்பு கூறிய பின்னர், அதனை ஏற்றுக் கொள்ளாத மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு, தனது தீர்ப்பில் ‘ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சின் தீர்ப்பு அவருக்கு எதிராக இருப்பினும், நீதிபதி கட்ஜு வேறு பலன்களை எதிர்பார்த்து இப்படி ஒரு தீர்ப்பு எழுதியுள்ளார்’ என்று குறிப்பிட்டிருந்தால், அடுத்த நாள் செய்தித் தாள்களில் இவ்வாறு செய்தி வந்திருக்கும்
‘உச்ச நீதிமன்ற நீதிபதி லஞ்சத்திற்கு மயங்கி ஐந்து நீதிபதிகள் பெஞ்சு தீர்ப்பிற்கு புறம்பாக தீர்ப்பு எழுதியுள்ளார்...மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு கடும் கண்டனம்’
செய்தியினை படிக்கும் வாசகர்களுக்கு, கட்ஜுவையும் தெரியாது. அவர் என்ன தீர்ப்பு கூறினார் என்றும் தெரியாது. ஆனால், ’இவனை எல்லாம் இப்படித்தான் போட்டுத் தள்ளனும். உச்ச நீதிமன்றமா? கொக்கா? என்று கை தட்டியிருப்பார்கள்’
***
கட்ஜூ தனது தீர்ப்பில் மேலும், ‘சில நீதிபதிகள் தங்களது சொந்த பந்தங்களை அதே நீதிமன்றத்தில் (அல்காபாத்) வழக்குரைஞர்களாக பணியாற்ற வைக்கிறார்கள். பணியாற்றத் தொடங்கிய சில வருடங்களிலேயே, நீதிபதிகளின் மகன்களும் உறவினர்களும் கோடீஸ்வரர்களாகி விடுகிறார்கள். பெரிய வீடு, ஆடம்பர கார்கள் மற்றும் அளப்பறிய வங்கிச் சேமிப்பு என சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்’ என்றும் கூறுகிறார்.
இதே கருத்தை பல ஆண்டுகளாக வழக்குரைஞர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். பொது மக்களும் கூறலாம். ஆனால் அவை யாவும் குற்றச்சாட்டுகள். அவ்வளவுதான். அவற்றை ஒருவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது கிடையாது. ஆனால் குற்றச்சாட்டுகள் தீர்ப்பாக உருமாறு முன்னர், அந்த தீர்ப்பு யாருக்கு எதிரானதோ அவரது கருத்து கேட்கப்பட வேண்டும். இல்லை அந்த தீர்ப்பு இல்லாநிலையது (void). ஏனெனில் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அதுவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு இறுதியானது.
நீதிமன்ற தாள்வாரங்களில் பேசப்படும் கிசுகிசுக்களை தனது தீர்ப்பில் கட்ஜு நுழைத்தால், அதுவும் அதிகார துஷ்பிரயோகமே!
***
கட்ஜு, உண்மையிலேயே ஹீரோவாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும். ‘ஏன், தங்கள் பதவிக்கு பெருமை சேர்த்த பல உயர்நீதிமன்ற நீதிபதிகளால் உச்ச நீதிமன்றத்திற்குள் நுழைய முடியவில்லை’ என்பதற்கான காரணத்தை, தனது தீர்ப்பில் அல்ல, தான் அவ்வப் பொழுது எழுதும் பத்திரிக்கை கட்டுரைகளில் தெரிவித்திருக்கலாம்.
சமீபத்தில் ஒரு உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகையில், குறிப்பிட்ட இரு நபர்கள் நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்று கொலேஜியத்தில் பங்கு வகித்த நேர்மையான ஒரு நீதிபதி எழுத்து மூலம் தெரிவித்த எதிர்ப்பினையும் (dissenting note) மீறி அந்த நபர்களை நீதிபதிகளாக எப்படி உச்ச நீதிமன்றம் அனுமதிக்கிறது என்று கேட்டிருக்கலாம்.
இன்று, ‘ராசாவை ஏன் இன்னமும் விசாரிக்கவில்லை’ என்று உறுமும் உச்ச நீதிமன்றம் ‘ஏன் வைப்பு நிதி ஊழலில் சம்பந்தப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதியை விசாரிக்கவில்லை’ என்று மைய புலனாய்வு அமைப்பைப் பார்த்து அன்று உறுமவில்லை என்று விளக்கியிருக்கலாம்.
சாந்தி பூசன், தனக்குத் தெரிந்து எட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்பதோடு நில்லாமல், யார் யார் என்ன என்ன ஊழல் செய்தார்கள் என்ற விபரத்தை சத்திய பிரமாண பத்திரமாக தாக்கல் செய்து ’முடிந்தால் என் மீது அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்து கொள்’ என்று சவால் விட்ட பிறகும் அவரை ஒன்றும் செய்யாமல் உச்ச நீதிமன்றம் பதுங்கி பின் வாங்குவது ஏன் என்று மற்ற நீதிபதிகளிடம் சண்டை பிடித்திருக்கலாம்.
அல்லது, இப்படி வெளிப்படையாக கூறிய பின்னரும் ஏன் அந்த தலைமை நீதிபதிகள் மீது குற்ற வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்று மத்திய அரசை சாடியிருக்கலாம்.
விஜிலன்ஸ் கமிசனர் வழக்கில், மத்திய அரசு வழக்குரைஞர் ‘ இப்படிப் பட்ட பதவி வகிப்பவர்களுக்கு ‘மாசற்ற் நேர்மை’ (impeccable integrity) இருக்க வேண்டுமென்று கூறினால், அதே அளவுகோலில் நீதிபதி பதவி வகிப்பவர்களையும் அளக்க வேண்டியிருக்கும்’ என்று பூடகமாக ஒரு மிரட்டல் விட்டதை ஏதோ அவர் கூறியது காதிலேயே விழவில்லை என்பது போல உச்ச நீதிமன்றம் நடிப்பது ஏன்? என்பதை வியந்திருக்கலாம்.
’மிஸ்டர் அட்டார்னி ஜெனரல், நாங்கள் அப்பழுக்கில்லாதவர்கள். வேண்டுமென்றால், எங்களை சோதித்துப் பாருங்கள்’ என்று எந்த நீதிபதியிடமிருந்தும் குரல் வரவில்லையே’ என்று வருத்தப்பட்டிருக்கலாம்.
இந்த கிருஷ்ண ஐயர் வேறு, சமய சந்தர்ப்பம் தெரியாமல், ’அட்டார்னி ஜெனரல் எப்படி அப்படி சொல்லப் போயிற்று, விடாதே அவரை ஒன்றில் இரண்டு பார்த்து விடு’ ஹிந்துவில் கட்டுரை எழுதி உசுப்பி விட்டுக் கொண்டிருக்கிறார். அவரிடமாவது ‘ஐயா நாங்க கைப்புள்ள... எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது’ என்று கொஞ்சம் அழுதிருக்கலாம்...
இதையெல்லாம், செய்திருந்தா அது ஹீரோயிசம்!
மதுரை
02/12/10
உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு தீர்ப்பினைப் பற்றி கவலைப்படாமல், அதற்கு எதிராக தீர்ப்பு கூறிய பின்னர், அதனை ஏற்றுக் கொள்ளாத மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு, தனது தீர்ப்பில் ‘ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சின் தீர்ப்பு அவருக்கு எதிராக இருப்பினும், நீதிபதி கட்ஜு வேறு பலன்களை எதிர்பார்த்து இப்படி ஒரு தீர்ப்பு எழுதியுள்ளார்’ என்று குறிப்பிட்டிருந்தால், அடுத்த நாள் செய்தித் தாள்களில் இவ்வாறு செய்தி வந்திருக்கும்
‘உச்ச நீதிமன்ற நீதிபதி லஞ்சத்திற்கு மயங்கி ஐந்து நீதிபதிகள் பெஞ்சு தீர்ப்பிற்கு புறம்பாக தீர்ப்பு எழுதியுள்ளார்...மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு கடும் கண்டனம்’
செய்தியினை படிக்கும் வாசகர்களுக்கு, கட்ஜுவையும் தெரியாது. அவர் என்ன தீர்ப்பு கூறினார் என்றும் தெரியாது. ஆனால், ’இவனை எல்லாம் இப்படித்தான் போட்டுத் தள்ளனும். உச்ச நீதிமன்றமா? கொக்கா? என்று கை தட்டியிருப்பார்கள்’
***
கட்ஜூ தனது தீர்ப்பில் மேலும், ‘சில நீதிபதிகள் தங்களது சொந்த பந்தங்களை அதே நீதிமன்றத்தில் (அல்காபாத்) வழக்குரைஞர்களாக பணியாற்ற வைக்கிறார்கள். பணியாற்றத் தொடங்கிய சில வருடங்களிலேயே, நீதிபதிகளின் மகன்களும் உறவினர்களும் கோடீஸ்வரர்களாகி விடுகிறார்கள். பெரிய வீடு, ஆடம்பர கார்கள் மற்றும் அளப்பறிய வங்கிச் சேமிப்பு என சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்’ என்றும் கூறுகிறார்.
இதே கருத்தை பல ஆண்டுகளாக வழக்குரைஞர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். பொது மக்களும் கூறலாம். ஆனால் அவை யாவும் குற்றச்சாட்டுகள். அவ்வளவுதான். அவற்றை ஒருவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது கிடையாது. ஆனால் குற்றச்சாட்டுகள் தீர்ப்பாக உருமாறு முன்னர், அந்த தீர்ப்பு யாருக்கு எதிரானதோ அவரது கருத்து கேட்கப்பட வேண்டும். இல்லை அந்த தீர்ப்பு இல்லாநிலையது (void). ஏனெனில் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அதுவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு இறுதியானது.
நீதிமன்ற தாள்வாரங்களில் பேசப்படும் கிசுகிசுக்களை தனது தீர்ப்பில் கட்ஜு நுழைத்தால், அதுவும் அதிகார துஷ்பிரயோகமே!
***
கட்ஜு, உண்மையிலேயே ஹீரோவாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும். ‘ஏன், தங்கள் பதவிக்கு பெருமை சேர்த்த பல உயர்நீதிமன்ற நீதிபதிகளால் உச்ச நீதிமன்றத்திற்குள் நுழைய முடியவில்லை’ என்பதற்கான காரணத்தை, தனது தீர்ப்பில் அல்ல, தான் அவ்வப் பொழுது எழுதும் பத்திரிக்கை கட்டுரைகளில் தெரிவித்திருக்கலாம்.
சமீபத்தில் ஒரு உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகையில், குறிப்பிட்ட இரு நபர்கள் நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்று கொலேஜியத்தில் பங்கு வகித்த நேர்மையான ஒரு நீதிபதி எழுத்து மூலம் தெரிவித்த எதிர்ப்பினையும் (dissenting note) மீறி அந்த நபர்களை நீதிபதிகளாக எப்படி உச்ச நீதிமன்றம் அனுமதிக்கிறது என்று கேட்டிருக்கலாம்.
இன்று, ‘ராசாவை ஏன் இன்னமும் விசாரிக்கவில்லை’ என்று உறுமும் உச்ச நீதிமன்றம் ‘ஏன் வைப்பு நிதி ஊழலில் சம்பந்தப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதியை விசாரிக்கவில்லை’ என்று மைய புலனாய்வு அமைப்பைப் பார்த்து அன்று உறுமவில்லை என்று விளக்கியிருக்கலாம்.
சாந்தி பூசன், தனக்குத் தெரிந்து எட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்பதோடு நில்லாமல், யார் யார் என்ன என்ன ஊழல் செய்தார்கள் என்ற விபரத்தை சத்திய பிரமாண பத்திரமாக தாக்கல் செய்து ’முடிந்தால் என் மீது அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்து கொள்’ என்று சவால் விட்ட பிறகும் அவரை ஒன்றும் செய்யாமல் உச்ச நீதிமன்றம் பதுங்கி பின் வாங்குவது ஏன் என்று மற்ற நீதிபதிகளிடம் சண்டை பிடித்திருக்கலாம்.
அல்லது, இப்படி வெளிப்படையாக கூறிய பின்னரும் ஏன் அந்த தலைமை நீதிபதிகள் மீது குற்ற வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்று மத்திய அரசை சாடியிருக்கலாம்.
விஜிலன்ஸ் கமிசனர் வழக்கில், மத்திய அரசு வழக்குரைஞர் ‘ இப்படிப் பட்ட பதவி வகிப்பவர்களுக்கு ‘மாசற்ற் நேர்மை’ (impeccable integrity) இருக்க வேண்டுமென்று கூறினால், அதே அளவுகோலில் நீதிபதி பதவி வகிப்பவர்களையும் அளக்க வேண்டியிருக்கும்’ என்று பூடகமாக ஒரு மிரட்டல் விட்டதை ஏதோ அவர் கூறியது காதிலேயே விழவில்லை என்பது போல உச்ச நீதிமன்றம் நடிப்பது ஏன்? என்பதை வியந்திருக்கலாம்.
’மிஸ்டர் அட்டார்னி ஜெனரல், நாங்கள் அப்பழுக்கில்லாதவர்கள். வேண்டுமென்றால், எங்களை சோதித்துப் பாருங்கள்’ என்று எந்த நீதிபதியிடமிருந்தும் குரல் வரவில்லையே’ என்று வருத்தப்பட்டிருக்கலாம்.
இந்த கிருஷ்ண ஐயர் வேறு, சமய சந்தர்ப்பம் தெரியாமல், ’அட்டார்னி ஜெனரல் எப்படி அப்படி சொல்லப் போயிற்று, விடாதே அவரை ஒன்றில் இரண்டு பார்த்து விடு’ ஹிந்துவில் கட்டுரை எழுதி உசுப்பி விட்டுக் கொண்டிருக்கிறார். அவரிடமாவது ‘ஐயா நாங்க கைப்புள்ள... எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது’ என்று கொஞ்சம் அழுதிருக்கலாம்...
இதையெல்லாம், செய்திருந்தா அது ஹீரோயிசம்!
மதுரை
02/12/10