30.12.07

பயணம் 1 - வேட்டங்குடி


Vettangudi Birds Sanctuary

மதுரை - மேலூர் - திருப்பத்தூர் சாலையில், திருப்பத்தூருக்கு சில கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். அதிக அளவில் பிரபலமாகாத இந்த சரணாலயத்திற்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு இருநாட்களுக்கு முன்பு போனது நல்ல அனுபவம்.

பறவைகளைப் பார்ப்பதற்கு வசதியாக உயரமான கண்காணிப்பு கோபுரம் உள்ளது. சரணாலயத்தை ஒட்டி உள்ள குடியிருப்பினை விட வேறு மனித இடையூருகள் இருக்காது. பறவைகளுக்கு தொந்தரவு என, கிராம மக்களும் தீபாவளிக்கு வெடி கூட வெடிப்பதில்லை.


Rest in Nest

மதுரை மேலூர் 30கி.மீ. பின்னர் மேலூரிலிருந்து சுமார் 25கி.மீ ரம்மியமான சாலையில் பயணம் செய்தால், வேட்டங்குடி வந்துவிடும். ஆனால், வழியில் ரொட்டித்துண்டினை பாதியாக வெட்டியது போன்று குன்றுகளை அறுத்து கிரானைட் கற்பாளங்களாக மாற்றுவதை காணும் அவலத்தினை தவிர்க்க இயலாது!



Ascent

கடைகள் ஏதும் இல்லை என்பதால், உணவுப் பொருட்களும், தண்ணீரும் கொண்டு செல்வது நல்லது. பிளாஸ்டிக் தவிர்க்க இயலாது எனில், கையுடன் திரும்பக் கொண்டு வந்து விடவும்.


Descent

படங்களை பெரிதாக பார்க்க, படத்தின் மீது க்ளிக்கவும்!

1 comment:

சுந்தரவடிவேல் said...

அந்தச் சாலையில பலமுறை போயிருந்தும் இங்க போனதில்ல. போவணும்.