14.9.06

நானாவதி!

(கொலை கதைகள் படிப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்காக, ஜூரர்கள் முறை இந்தியாவில் இருந்து ஒழிந்து போக காரணமாதும், பரபரப்பாக பேசப்பட்டதுமான வழக்கினைப் பற்றியது. நீதிமன்ற தீர்ப்புகளை பின்பற்றி கற்பனன ஏதும் இன்றி எழுதப்பட்டது. மொழி பெயர்ப்பல்ல!)

'இன்று எப்படியும் இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டி விட வேண்டும்' கவாஸ் நானாவதி நினைத்துக் கொண்டார். 'எத்தனை நாட்கள் மனதுக்குள் வைத்து புழுங்குவது? எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் துரத்தி துரத்தி அரித்துக் கொண்டிருக்கும் கேள்விக்கு இன்று விடை கண்டு விட வேண்டும். இனிமேலும் இதை வளர விடக்கூடாது' என்று ஏதேதோ கறுவிக் கொண்டு இருந்தார்.

இந்திய கப்பற்படையில் உயர் பதவியில் இருந்த நானாவதிக்கு மனப்புழுக்கம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். நானாவதியும் அவரது அவரது மனைவியான சில்வியாவும் பம்பாய் மேல்தட்டு வர்க்கத்தில் மிகவும் பிரபலம். 'இருவரும் என்ன பொருத்தம். அழகு' என்று அவர்கள் கலந்து கொள்ளும் விருந்துகளில் பொறாமைக் கண்கள் அவர்கள் மீது விழும். இந்திய பார்ஸி சமூகத்தை சார்ந்தவரான நானாவதியை ஆங்கிலேயரான சில்வியா காதல் திருமணம் புரிந்ததில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. பத்து வருட திருமண வாழ்க்கையின் பலனாக இரண்டு மகன்கள், ஒரு மகள். நானாவதியின் வேலை நிமித்தமாக பல இடங்களில் மாறி மாறி வசித்து வந்த மகிழ்ச்சிகரமான அந்த குடும்பத்தில் புயல் வீசப் போகிறது என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

புயலுக்கு காரணமானவர் பம்பாய் 'பார்ட்டி சர்க்கியூட்' என்று அழைக்கபடும் விருந்துக் குழுமத்தில் பிரபலமான பிரேம் அஹ¤ஜா. அஹ¥ஜா 34 வயது இளைஞர். சிந்தியரான அஹ¤ஜா பம்பாயில் தனது சகோதரியான மாம்மியுடன் வசித்து வந்தார். ஆட்டோ-மொபைல் தொழில் செய்து வந்த அஹ¤ஜாவின் உபதொழில் 'திருமணமான பெண்களைக் கவருவது' என்பது பம்பாய் விருந்துக் குழுமங்களில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அதுவும் பணி நிமித்தமாக அதிக காலம் வெளியே தங்க நேரிடும் பல கப்பற்படை அதிகாரிகளின் குடும்பங்களில் பிரச்னைகளை உருவாக்கியவர் என்பது அனைவாரலும் பேசப்பட்ட ஒரு ரகசியம்.

திருமணம் முடிந்து ஏழு வருடங்கள் கழித்து 1956ல் நானாவதியும் சில்வியாவும் குழந்தைகளுடன் பம்பாயில் குடியேறினர். இருவருக்கும் தெரிந்த நண்பர் ஒருவர் மூலம் அஹ¤ஜா நானாவதியுடன் அறிமுகம் கிட்ட விரைவிலேயே குடும்ப நண்பர்களாக மாறினர். அஹ¤ஜாவின் வசீகரமும், செல்வமும், மேல்தட்டு பழக்க வழக்கங்களும் நானாவதியையும் சில்வியாவையும் அஹ¤ஜா பக்கம் இழுத்தது. நானாவதி பணி நிமித்தம் அடிக்கடி வெளியே செல்ல, சில்வியாவுக்கு அஹ¤ஜாவின் மீதான நட்பு காதலாக மாறியது.

முதலில் அஹ¤ஜாவுக்கு சில்வியாவின் மீது இருந்தது மோகம்தான். ஆனல் சில்வியாவோ அஹ¤ஜா மீது அளவு கடந்த காதல் கொண்டிருந்தார். 'திருமணம் செய்து கொள்ளலாம்' என்று சில்வியா வேண்டிய போது, 'அப்படியானால் எத்தனை பெண்களைத்தான் நான் மணந்து கொள்வது?' என்று அலட்சியமாக பதிலளித்தார். சில்வியாவுக்கோ உயிரே பிரிந்தது போல இருந்ததாம். ஆனால் காலம் செல்ல செல்ல சில்வியாவின் அபரிதமான காதலால் அஹ¤ஜாவின் மனம் மாறியது என்றே தோன்றுகிறது. 'ஒரு மாதம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருப்பது. அதற்குப் பின்னரும் காதல் மிஞ்சியிருந்தால் திருமணம் செய்து கொள்வது' என்று முடிவெடுத்திருந்தனர்.

இதற்கிடையில்தான் நானாவதிக்கு மனைவியின் நடவடிக்கை மீது சந்தேகம் வலுத்தது. கடந்த சில மாதங்களாகவே சில்வியாவின் உறவில் ஒருவிதமான இறுக்கத்தை கவனித்து வந்தார். 1959ல் இரண்டு வார கப்பல் பயணத்துக்குப் பிறகு ஏப்ரல் மாதம் பதினெட்டாம் தேதி வீட்டுக்கு வந்திருந்தார். அவரது சகோதரரும் தனது மனைவியுடன் விருந்தினராக வந்திருந்தார். இருவரும் குடும்பத்துடன் மூன்று நாட்கள் அஹமது நகர் சென்றனர். பம்பாய் திரும்பிய சில நாட்களில் நானாவதியின் சகோதரர் சென்று விட்டார். இரு குடும்பங்களும் பேசி மகிழ்ந்தாலும் சில்வியா முகத்தில் வழக்கமான உற்சாகம் இல்லை. நானாவதியின் கேள்விக்கும் சரியான பதில் இல்லை. 'அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் ஓ.கே.' என்பதுதான் பதிலாக இருந்தது.


***
ஏப்ரல் மாதம் 27ம் தேதி. நானாவதி வீட்டு செல்ல நாய்க்கு உடல்லை சரியில்லை. நானாவதியும் சில்வியாவும் நாயை அழைத்துக் கொண்டு பம்பாய் பரேலில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு சென்றனர். திரும்பி வரும் வழியில் சில்வியா 'மெட்ரோ சினிமா'வில் மாலைக் காட்சிக்காக அனுமதிச் சீட்டுகள் வாங்கினார். பின்னர் வீட்டில் மதிய உணவுக்காக மேசையில் அமர்ந்திருக்கையில் நானாவதி தனது கைகளை சில்வியாவின் தோள் மீது ஆதரவாக வைத்தார். ஆனால் சில்வியாவோ நானாவதியின் இந்த செயலால் மேலும் இறுக்கமானது போல இருந்தது. அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

உணவுக்கு பின்னர், சில்வியா எதுவும் பேசாமல் முன்னறைக்கு சென்று ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார். அவர் அருகே சென்று அமர்ந்த நானாவதி மெல்ல ஆரம்பித்தார்.

"கவனி. சில விஷயங்களை நமக்குள் நேரிடையாக தீர்த்துக் கொள்வது நல்லது. என் மீது உனக்கு இன்றும் முன்பு போலவே காதல் உள்ளதா?"

சில்வியாவிடம் இருந்து பதில் ஏதும் இல்லை.

"நீ வேறு யாரையும் காதலிக்கிறாயா?"

மீண்டும் பதில் இல்லை.

நானாவதிக்கு உடனே அஹ¤ஜாவின் நினைப்பு வந்தது. ஏனெனில் சில நாட்களுக்கு முன்னர் அவர் கப்பலில் இருக்கும் போது அவரது சகோதரர் அளித்த ஒரு விருந்தில் கலந்து கொள்ள சில்வியா போகவில்லை. ஏன் போகவில்லை என்று பின்னர் கேட்ட போது, 'அஹ¤ஜாவின் சகோதரி அளித்த ஒரு விருந்தில் கலந்து கொள்வதாக ஏற்கனவே ஒத்துக் கொண்டதால் போகவில்லை' என்று பதில் வந்தது. 'அஹ¤ஜாவாக இருக்குமோ' என்று ஒரு கணம் நினைத்த நானாவதி,

"யார் அஹ¤ஜாவா? சொல்" என்றார்.

"ம்" சில்வியா இந்த முறை பதிலளித்தார்.

"நீ எனக்கு உண்மையுள்ளவளாக இருக்கிறாயா?" என்ற கேள்விக்கு பதிலில்லை சில்வியாவிடமிருந்து. ஆனால் 'இல்லை' என்று உணர்த்தும் விதமாக தலையசைத்தார்.

நானாவதி திடுக்கிட்டார். சில்வியாவைப் பற்றியிருந்த கரத்தை விடுவித்தவாறு, " நான் உடனே போய் அந்தப் பன்றியுடன் இந்த விஷயத்தைப் பேசி தீர்க்கப் போகிறேன்"

உடனே சில்வியா நானாவதியின் கரங்களைப் பற்றியபடி "இல்லை. இல்லை. நீங்கள் போக வேண்டாம். அவனிடம் துப்பாக்கி இருக்கிறது. உங்களைச் சுட்டு விடுவான். அவனிடம் என்ன பேசப் போகிறீர்கள்?" பதட்டத்துடன் கெஞ்சினாள்.

"அவன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பது எனக்குத் தெரிய வேண்டும். உன்னைத் திருமணம் செய்து குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள அவன் தயாராக இருக்கிறானா என்று கேட்கப் போகிறேன். இந்தத் துரோகத்துக்கு அவன் பதில் சொல்ல வேண்டும்"

நானாவதி தொடர்ந்தார், "இந்தப் பிரச்னையிலிருந்து மீள்வதற்கு கவுரமான ஒரே வழி அவன் உன்னை திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை பார்த்துக் கொள்வதுதான். பேசிப் பார்ப்பேன். இல்லை அவனை அடித்து நொறுக்கி விடுவேன்"

"சொல்லு. அவன் உன்னை திருமணம் செய்து கொள்வதற்கு தயாராக இருக்கிறானா?" மீண்டும் மீண்டும் கேட்டும் சில்வியாவிடம் இருந்து பதில் வரவில்லை.

***

ஏப்ரல் மாதம் 27ம் தேதி மதிய உணவுக்கு பின் மேற்கண்ட உரையாடல் தங்களுக்குள் நடந்ததாக நானாவதியும் சில்வியாவும் பின்னர் அடித்துக் கூறினாலும்...இத்தகைய அமைதியான முறையில் இந்த உரையாடல் நடந்திருக்க முடியாது என்று நீதிமன்றங்கள் நிராகரித்தன. நானாவதியின் கழுத்துக்கு முன்னர் தொங்கிய தூக்குக் கயிற்றிலிருந்து தப்பிக்கும் வண்ணம் கணவன் மனைவி இருவரும் பேசி வைத்து இந்த உரையாடலை ஜோடித்திருக்க வேண்டும் என்று கருதின. ஏனெனில் அந்த நாளின் மாலையில் நானாவதி செய்த காரியம் அப்படிப்பட்டது.


மாலை நானாவதி சில்வியாவையும் குழந்தைகளையும் தனது காரில் மெட்ரோ சினிமா அழைத்துச் சென்றார். அரங்கத்தில் அவர்களை இறக்கி விட்டவர், தான் கப்பலிலுள்ள மருத்துவமனையில் சுகவீனமான நாய்க்கு மருந்து வாங்கி விட்டு காட்சி முடியும் நேரத்தில் வந்து அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறிச் சென்று விட்டார். ஆனால் திரைப்படம் முடிந்து வெகு நேரமாகியும் நானாவதி வரவில்லை. சில்வியா குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனியே வீட்டுக்கு திரும்ப வேண்டியதாகி விட்டது.

மாலை மணி 4.45. கப்பற்படையின் புரோவோஸ்ட் மார்ஷலான கமாண்டர் சாமுவேல் நியூ குயின்ஸ் சாலையில் இருந்த தனது வீட்டின் ஜன்னல் வழியே அருகிலிருந்த பாண்ட் ஸ்டாண்டின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார். திடீரென ஜன்னல் முன் தோன்றிய அந்த உருவம் அவரை அதிர்ச்சியடைய வைத்தது. ஒரு கணம் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. 'நானாவதி! என்னவாயிற்று இவனுக்கு? நன்றாக குடித்திருக்கிறானோ?' பல கேள்விகள் மனதில் ஓடி மறைந்தன.

"நானாவதி? என்ன நடந்தது. ஏன் இப்படி இருக்கிறாய்? இங்கே என்ன திடீரென?" கேள்விகளை அடுக்கியவாறே நானாவதியை எதிர் கொண்டார்.

"கமாண்டர், எனக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் நான் ஒரு மனிதனை சுட்டு விட்டேன் என்று நினைக்கிறேன்"

"என்ன சுட்டு விட்டாயா? எங்கே நடந்தது"

"நேபியன் ஸீ சாலையில்"

"ஏன்?"

"அவன் என் மனைவியை நயவஞ்சகமாக உறவு கொண்டு விட்டான்"

"சரி! சரி! உள்ளே வந்து அமைதியாகச் சொல். என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்"

"நன்றி. ஆனால் நான் போக வேண்டும். நான் எங்கே சென்று இதனை சொல்ல வேண்டும் என்று சொல். அது போதும்"

கமாண்டர் சாமுவேல் எவ்வளவு வருந்தி அழைத்தும் நானாவதி உள்ளே வரவில்லை, "சரி. நீ சி.ஐ.டி அலுவலகத்தில் உள்ள துணை ஆணையாளர் லோபோவைப் போய் பார். நான் அவருக்கு இப்போதே ஃபோன் செய்து நீ வரும் விபரம் சொல்கிறேன்"

அப்படியே கமாண்டர் சாமுவேல் துணை ஆணையாளர் லோபோவை தொடர்பு கொண்டு பேசினார். அவர் பேசி முடிக்கையில் நானாவதி அங்கு இல்லை. புரோவஸ்ட் மார்ஷல் என்பவர் கப்பற்படையில் காவல் பணிகளைச் செய்பவர். எனவே அவருக்கு காவல் துறையுடன் நெருங்கிய தொடர்புண்டு.

***

மாலை மணி 5.05. காம்தேவி காவல் நிலைய காவலர், உதவி ஆய்வாளர் பஃன்சால்கருக்கு, காவல் நிலையத்துக்குள் பதட்டத்துடன் ஓடி வரும் அந்த மனிதனைப் பார்த்ததும் புரிந்து போனது, 'இது ஒரு சாதாரண வழக்காக இருக்கப் போவதில்லை' என்று.

"ஐயா. கொலை நடந்துருச்சு"

"என்ன கொலையா? யாரை? எங்கே?"

"என் பெயர் புரன்சிங். நான் ஸெடல்வாட் ரோட்டில இருக்கிற 'ஜீவன் ஜ்யொத்' கட்டிடத்தில் வாட்ச் மேனா இருக்கிறேன். எங்க பில்டிங்ல பிரேம் அஹ¤ஜா என்பவர் இருக்கிறார். அவரோட ஃபிரண்ட் நானாவதி. நேவில ஆபிஸரா வேலை பார்க்கிறார். நாலே கால் மணி இருக்கும் நானாவதி அவரோட கார்ல வந்தாரு. காரை நிறுத்திட்டு படியில ஏறி அஹ¤ஜா வீட்டுக்கு போனவரு, ஐந்து நிமிடம் கூட இருக்காது திரும்பி வந்து காரை வேகமா திருப்பி வேளியே போகப் பார்த்தார். அவர் பின்னாலேயே அஹ¤ஜா வீட்டில வேலை பார்க்கிற அஜ்னானியும், தீபக்கும், 'நானாவதி அஹ¤ஜாவை கொன்று விட்டதாக சொல்லிக்கொண்டு ஓடி வந்தார்கள். நான் கேட்டில் காரை மறித்ததும் அஜ்னானி காருக்கு முன்னால் வந்து நின்று கொண்டார். 'ஏன் அஹ¤ஜாவை கொன்றீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'அவன் என் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்தான். எனவே அவனுடன் எனக்கு சண்டை வந்து அவனைக் கொன்று விட்டேன்' என்றார்"

"ம்ம்ம்...மேலே சொல்லு. பிறகு என்ன நடந்தது" பஃன்சால்கர்.

"நான் அவரிடம் போலீஸ் வரும் வரை அவர் அந்த கட்டிடத்தை விட்டு போகக் கூடாது என்று சொன்னேன். அதற்கு அவர், தானும் போலீஸ் ஸ்டேஷனுக்கே செல்வதாக சொல்லிவிட்டு காரை ஓட்டிக் கொண்டு போய்விட்டார். பின்னர் அஹ¤ஜாவின் அக்கா மாம்மி என்னை இங்கு வரச் சொன்னார்கள். நீங்கள் உடனே அங்கு வரவேண்டும்"

"சரி வா, போகலாம்" ப•ன்சால்கர் புரன்சிங்கை தன்னுடன் ஜீப்பில் ஏற்றிக் கொண்டார்.

***

அஹ¤ஜாவின் ஃப்ளாட் இருந்த நேப்பியன் ஸீ சாலை பம்பாயிலேயே அதிக விலைமதிப்பு மிக்க இடம். பெரிய தொழில் அதிபர்கள் வசிக்கும் இடம். அங்கு வீடுகளை வைத்திருக்கும் கனவான்கள், 'இந்தியாவிலேயே மிகப் பெருமை மிக்கது இந்த விலாசம்' என்று சொல்லிக் கொள்வர்.

அஹ¤ஜாவின் வீடு ஜீவன் ஜ்யோத் கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்தது. பஃன்சால்கர் அங்கு சென்ற போது புரன்சிங் குறிப்பிட்ட அஹ¤ஜாவின் சகோதரி மாம்மி, வேலையாட்கள் அஜ்னானி, தீபக் இவர்களுடன் மருத்துவர் ஒருவரும் இருந்தார்.

அது ஒரு பெரிய ஃப்ளாட். முதலில் ஒரு ஹால். அந்த ஹாலின் வடக்குப் பக்கம் அஹ¤ஜாவின் படுக்கை அறை. அங்கு சுவ்ரை ஒட்டியபடி ஒரு பெரிய ரேடியோகிராம். அதற்கு தெற்குப்பக்கம் குளியலறைக்குச் செல்லும் கதவு. அந்தக் கதவுக்கு அடுத்து கண்ணாடியுடன் கூடிய அலங்காரம் செய்து கொள்ளும் கப்போர்ட்டு.

பாத்டப் வசதியுடன் பெரிய குளியலறை அது. அங்கிருந்த கம்மோடுக்கு மேலாக சிறிய கண்ணாடிகள் பொருத்திய ஜன்னல். அஹ¤ஜா, வலது கை மீது தலையை தாங்கி இடுப்பில் ஒரு டவலை மட்டும் சுற்றியபடி,அந்தக் குளியலறையில்தான் பிணமாகக் கிடந்தார். தலை படுக்கையறை பக்கமாகவும் கால்கள் கம்மோடினை நோக்கியும் கிடந்தது. கம்மோடுக்கு மேலிருந்த ஜன்னல் கண்ணாடிகள் உடைந்திருந்தது. குளியலறையிலேயே அஹ¤ஜாவின் மூக்குக் கண்ணாடியும் இரண்டு சுடப்பட்ட தோட்டாக்களும் இருந்தது. அஹ¤ஜாவின் ஒரு செருப்பு குளியலறையிலும் மறுசெருப்பு படுக்கையறையிலும் இருந்தது. குளியலறை சுவர்களிலும் அதன் கதவு கைப்பிடியிலும் இரத்தம் சொட்டிக் கொண்டு இருந்தது. மூலையில் ஒரு கவர் "லெஃப்டினண்ட் கானல் கே.எம்.நானாவதி என்ற பெயரைத் தாங்கியபடி நடந்த நிகழ்ச்சிக்கு சாட்சியாக கிடந்தது.

***

உதவி ஆய்வாளர் ஃபன்சால்கர் அஹ¤ஜாவின் வீட்டுக்கு போன அதே வேளையில் நானாவதி துணை ஆணையாளர் லோபோவின் அலுவலகத்தில் இருந்தார். லோபோ இது ஒரு கொலை வழக்கு என்பதால் அங்கிருந்த ஆய்வாளர் மோக்காஷியிடம் நானாவதியை அவரது பாதுகாப்பில் எடுத்து வழக்கினை புலன் விசாரணை செய்யும்படி உத்தரவிட்டார்.

நானாவதியை காவல் சிறையில் வைத்த மோக்காஷி சம்பவ இடத்துக்கு விரைந்தார். அங்கு ஏற்கனவே சென்றிருந்த உதவி ய்வாளர் ஃபன்சால்கர் மோக்காஷிக்காக காத்திருந்தார். அது ஒரு கொலை வழக்கான பட்சத்தில் ஆய்வாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரிதான் புலன் விசாரணை செய்ய முடியும்.

***

பிரேத விசாரணையை (inquest) முடித்து அஹ¤ஜாவின் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக (autopsy) அனுப்பிய மோக்காஷி அங்கேயே விசாரணையை தொடங்கினார். கொலை நடந்த வீட்டிற்குள் மூன்று நபர்கள் இருந்தாலும் யாரும் கொலையை நேரடியாக கண்ணுறவில்லை. ஆனாலும் அஹ¤ஜாவை சுட்டுக் கொன்றது நானாவதி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனாலும் எதையும் எளிதாக, அதுவும் கொலை வழக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என்பதை அனுபவம் அவருக்கு உணர்த்தியிருந்தது.

டாக்டர் ஜாலா என்பவரால் அஹ¤ஜாவின் பிரேதம் பரிசோதனை செய்யப்பட்டது. ஒரு குண்டு அஹ¤ஜாவின் வலது நெஞ்சுப் பகுதியில் புகுந்து சற்றே கீழிறங்கி நுரையீரலைத் துளைத்து அங்கேயே தங்கியிருந்தது. நெஞ்சில் குண்டு துளைத்த இடத்தில் கரித்துகள்களோ அல்லது திசுக்கள் பொசுக்கப்பட்ட தடங்களோ (charring or carbonaceous tatooing) இல்லை. மற்றொரு குண்டு தலையில் பின்பகுதியில் வேகமாக சிராய்த்து உட்புகாமல் ஆனால் பலத்த ரத்தப்போக்கை கபாலத்துக்குள் ஏற்படுத்தியிருந்தது. இடது கையில் இரு விரல்களுக்கு இடையேயும் குண்டு பாய்ந்து சென்ற காயம் இருந்தது. இடது உள்ளங்கையில் பின்புறத்தில் மேலும் இரண்டு இடங்களில் குண்டு பாய்ந்ததற்கான காயங்கள். உள்ளங்கை காயங்களில் கரிபதிந்து பொசுங்கியிருந்தது. உள்ளங்கையில் இருந்த மூன்று காயங்களும் ஒரு குண்டினாலேயே ஏற்பட்டிருக்க வேண்டும், அதுவும் கை துப்பாக்கியிலிருந்து ஆறிலிருந்து பதினெட்டு அங்குல தூரத்தில் இருக்கையிலேயே ஏற்பட்டிருக்க வேண்டும் என அனுமானித்தார். இதைத் தவிர அஹ¤ஜாவின் உடலில் பெரிய காயங்கள் எதுவும் இல்லை.

நானாவதியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ஆறு ரவைகள் பொருத்தக்கூடிய செமி-ஆட்டோமாட்டிக் ரக கைத்துப்பாக்கி. செமி ஆட்டோமாட்டிக் என்பதால் ஒவ்வொரு தோட்டாவை சுடுவதற்கும் குதிரையை இழுக்க வேண்டும். இழுக்கப்பட்ட குதிரையை மீண்டும் விட்டாலே அது பழைய நிலைக்கு போய் அடுத்த தோட்டா சுடுவதற்கு தயாரான நிலைக்கு வரும். இவ்வாறாக குதிரையை இழுத்து விடுவது தோட்டா இருக்கும் அறையை சுழற்றி விடுவதற்கும் தோட்டாவை அறைந்து சுடுவதற்குமான இரண்டு பணிகளையும் செய்வதால் அதற்கு அதிகம் பலம் உபயோகப்படுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு முறை சுடுவதற்கும் குறைந்தது 20 பவுண்டு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.

அந்தத் துப்பாக்கியிலிருந்து மூன்று தோட்டாக்கள் சுடப்பட்டிருந்தன. இரண்டு குளியலறையிலும் ஒரு தோட்டா அஹ¤ஜவின் உடலிலிருந்தும் கண்டெடுக்கப்பட்டன.

***

ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்துக்குள் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படவேண்டும். கொலை நடந்த அன்றே கைது செய்யப்பட்ட நானாவதியும், மறு நாள் நீதிபதி முன்று ஆஜர்படுத்தப்பட்டார். காவலர்கள் அவரை மேலும் விசாரிக்க வேண்டியிருந்ததால், நீதிபதி அவரை காவலர் வசமே ஒப்படைத்தார். காவலர்கள் விசாரணை முடிந்தவுடன் விசாரணைக் கைதியாக சிறையில் அடைப்பது வழக்கம். பின்னர் புலன் விசாரணை முழுவதுமாக முடிந்தவுடன் குற்றம் சாட்டப்பட்டவரை பிணையில் (bail) விடுவிப்பதுண்டு. ஆனால் கைது செய்யப்பட்ட மூன்றாவது நாளே, நீதிபதிக்கு பம்பாய் கப்பற்படை பிரிவின் கொடி அலுவலரிடம் இருந்து ஒரு கடிதம், ' கப்பற்படை சட்டத்தின் அதிகாரத்தினை பயன்படுத்தி நானாவதி சிறைக் காவலில் அல்லாமல் கப்பற்படைக் காவலில் வைக்கப்படுகிறார்' என்பதாக. நீதிபதிக்கு வேறு வழியில்லை. எனவே நானாவதி சாதாரண சிறையில் ஒரு நாள் கூட கழிக்காமல் கப்பற்படைக் காவலிலேயே பாதுகாக்கப்பட்டார்.

புலன் விசாரணை வேகமாக முடிந்து, அஹ¤ஜா கொலை வழக்கு பம்பாய் அமர்வு நீதிபதி (Sessions Judge) முன்னர் விசாரணைக்கு வந்தது. ஜூரர்கள் முன்னதான விசாரணை. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருப்பது போல இந்தியாவிலும் எழுபதுகள் வரை கிரிமினல் வழக்குகள் ஜூரர்கள் முன்னிலையில் நடைபெற்றன.

ஜூரர்களை கொண்டு விசாரிக்கப்படும் வழக்குகளில் நீதிபதியும் இருப்பார். வழக்கின் சட்டம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு (questions of law) நீதிபதிதான் பதிலளிப்பார். ஆனால் பொருண்மை சம்பந்தமான கேள்விகளுக்கு (questions of fact) ஜூரர்கள் பதிலளிப்பர். உதாரணமாக குற்றம் சாட்டப்பட்ட நபர் கொலை செய்துள்ளாரா இல்லையா என்பதை ஜூரர்கள் தீர்மானிப்பர். அதற்கு உதவும் வண்ணம் வழக்கு விசாரணை முடிந்தவுடன், நீதிபதி ஜூரர்களுக்கு வழக்கின் தன்மை மற்ற பிற சட்டம் சார்ந்த விஷயங்களை விளக்குவார். அதற்குப் பிறகு ஜூரர்கள் தங்களது தீர்ப்பினை கூறுவர். குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியா இல்லையா என்பதை ஜூரர்கள் தீர்மானித்த பிறகு தண்டனை என்ன அளிப்பது என்பதை நீதிபதி தீர்மானிப்பார். பொதுவாக குற்றவியல் சட்டங்களில் அதிக பட்ச தண்டனை குறிப்பிடப்பட்டிருக்கும். அந்தக் குறிப்பிட்ட கால அளவைக்குள் நீதிபதி என்ன தண்டனை வேண்டுமானாலும் அளிக்கலாம்.

ஜூரர்கள் முறை 1861ம் ண்டு இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜூரர்களின் அனுபவமின்மையும் மற்ற சில காரணங்களும் பல தவறான தீர்ப்புகளுக்கு வழிவகுத்து விட்டதால் 1872ல் நீதிபதி ஜூரர்களின் தீர்ப்பிலிருந்து வேறுபடும் போது வழக்கினை உயர்நீதிமன்றத்தின் ய்வுக்கு அனுப்பலாம் என்ற சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டது. வேறு சில திருத்தங்களுக்கு பின்னர் இறுதியில் 'ஒரு வழக்கில் ஜூரர்களின் முடிவு, நெறிமுறைக்குட்பட்டு ஒரு மனிதன் எடுக்கும் முடிவுக்கு வேறுபட்டது' என்று நீதிபதி கருதினால், அவர் தனது கருத்தினை தெளிவாக எழுதி உயர்நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பலாம் என்பது சட்டமாக இருந்தது.

***

ஒரு சாதாரண கொலை வழக்கு இந்தியாவின் மத்தியதர மேல்தட்டு மக்களிடையே மிக மிக பரபரப்பாக விவாதிக்கப்பட்டதற்கு சம்பந்தப்பட்டவர்களின் சமுதாய தகுதிகள்தான் காரணம் என்றாலும், மரபு மீறிய காதல் அதன் தகாத விளைவுகளைப் பற்றி பொதுவாக மக்கள் மத்தியில் நிலவிய குற்ற உணர்வும் ஒரு காரணம் எனலாம். ஆர்.கே.கரஞ்சியாவின் 'பிளிட்ஸ்' பத்திரிக்கை நானாவதிக்காக பரிந்து பேசி அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஒரு இயக்கத்தையே நடத்தியது. வழக்கு விபரங்கள் தொடர்ந்து பத்திரிக்கைகளில் வெளிவந்தன. பம்பாயில் பல மக்கள் 'பிளிட்ஸ்' வருகையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அரசு தரப்பு வழக்கு மிகவும் எளிதானது. 'சில்வியா நானாவதியிடம் அஹ¤ஜா மீதான தனது காதலை பற்றி கூறியவுடன், நானாவதி மனைவியை திரைப்படத்துக்கு அனுப்பிவிட்டு தனது கப்பலுக்குச் சென்று, 'தான் அஹமது நகர் வரை தனியாக செல்ல வேண்டியிருப்பதாகவும், பாதுகாப்புக்கு ஒரு கைத்துப்பாக்கி வேண்டுமென' பொய்யான காரணத்தைக் கூறி துப்பாக்கியை பெற்று பின்னர் அஹ¤ஜாவின் வீட்டுக்குச் சென்று அவரை சுட்டுக் கொன்று விட்டார். எனவே அது மரணதண்டனைக்கு ஏதுவான திட்டமிட்ட கொலை' என்பது தான் அரசு வழக்கு.

கொலை நடந்த பொழுது அதே வீட்டில் இருந்த மூன்று முக்கிய சாட்சிகள் அஹ¤ஜாவின் அக்கா மாம்மி மற்றும் வேலைக்காரர்கள் அஜ்னானி, தீபக் ஆகியோர்.

முதலில் அஜ்னானி, "சரியாக நாலு மணி பதினைந்து நிமிடத்திற்கு அஹ¤ஜாவின் அறைக்கு தேநீர் கோப்பையை எடுத்து வரப்போனேன். அப்போது அவர் குளியலறைக்கு சென்று விட்டார். ஐந்து நிமிடம் கழித்து சமையலறையிலிருந்த நான் கதவு மணி அடிக்கும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தேன். உள்ளே வந்த நானாவதி நேராக அஹ¤ஜாவின் அறைக்குச் சென்றார்"

அஹ¤ஜாவின் சமையல்காரரான தீபக், "கதவு மணி அடிக்கும் சத்தம் கேட்டு நான் பார்த்தபோது நானாவதி உள்ளே வந்து விட்டார். அவர் 'பிரேம்' என்று கூப்பிட்டபடியே வேகமாக அஹ¤ஜாவின் அறைக்குச் சென்றார். அப்போது அஹ¤ஜா கண்ணாடிக்கு முன் அமர்ந்து தலை சீவிக் கொண்டு இருந்ததைப் பார்த்தேன். உள்ளே சென்ற நானாவதி கதவை உடனே சாத்தி விட்டார்'

மாம்மி, 'நான் எனது அறையிலிருந்த அலமாரியிலிருந்த சேலையை எடுத்துக் கொண்டிருக்கும் போது நானாவதி உள்ளே வரும் சத்தம் கேட்டது. சேலையை எடுத்த நான் அறை வாயிலுக்கு வரும் போது ஜன்னல் கண்ணாடிகள் உடையும் சத்தம் கேட்டது. ஒரு இருபது வினாடி நேரம்தான் இடைவெளி இருக்கும் இரண்டு செயல்களுக்கும்' என்றார்.

துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு மாம்மி அஹ¤ஜாவின் அறைக்குச் செல்லும் முன்னதாகவே அஜ்னானியும் தீபக்கும் அறைக்குள் புகுந்து விட்டனர். அங்கே கீழே விழுந்து கிடந்த அஹ¤ஜாவின் முன்னர் நானாவதி கைத்துப்பாக்கியுடன்! துப்பாக்கியை அஜ்னானி முன் நீட்டிய அஹ¤ஜா, 'அவரை யாராவது தடுத்தால் அவர்களையும் சுடப் போவதாக மிரட்டினார்'. 'இது என்ன?' என்று கேட்ட மாம்மியை பொருட்படுத்தாமல் வீட்டை விட்டு வெளியேறினார் நானாவதி. இந்த மூன்று நபர்களின் சாட்சியில் மிகச் சிறிய முரண்பாடுகள் இருந்தாலும், பொதுவாக நானாவதி அஹ¤ஜாவின் அறைக்குள் புகுந்து சில வினாடி நேரங்களில் அவரது துப்பாக்கியில் இருந்து மூன்று தோட்டாக்கள் வெளியேறி விட்டது என்பது உறுதியானது.

***

பொதுவாக குற்றவியல் வழக்குகளில் அரசுத் தரப்பு, குற்றத்தை நிரூபிக்க வேண்டுமென்பதால் குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பில் சாட்சிகள் ஏதும் இருக்காது. ஆனால் நானாவதி தரப்பில் பல சாட்சிகள் முன்னிறுத்தப்பட்டன. முக்கியமாக நானாவதி மற்றும் சில்வியா!

அஹ¤ஜாவை சுட்டது நானாவதிதான் என்பது உறுதியான விஷயம் என்பதால், நானாவதியின் வாதம், 'அது கொலையல்ல. இருவருக்கும் நடைபெற்ற போராட்டத்தில் தவறுதலாக குண்டுகள் பாய்ந்து அஹ¤ஜா மரணமடைந்தார்' என்பதுதான். இரண்டாவது அவ்வாறே நானாவதி அஹ¤ஜாவை கொன்றிருந்தாலும் 'அது ஒரு திட்டமிட்ட கொலையல்ல. திடீரென ஏற்பட்ட உணர்ச்சி வெள்ளத்தில் உருவான நிகழ்வு' என்று கூறப்பட்டது.

நானாவதி தனது சாட்சி விசாரணையில், இந்தக் கட்டுரையின் முதலில் சொல்லப்பட்ட உரையாடலைத் தொடர்ந்து தான் 'அஹ¤ஜா சில்வியாவை திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை பார்த்துக் கொள்ள' தயாராக இருக்கிறானா என்று கேட்கத்தான் அவன் வீட்டுக்கு போனதாக கூறுகிறார். 'அஹ¤ஜாவிடம் துப்பாக்கி இருப்பதாக சில்வியா கூறியதின் பேரிலேயே தானும் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு போனதாக' ஒரு சப்பைக்கட்டு!
"நான் அஹ¤ஜாவின் அறைக்குள் நுழைந்ததும், 'அசிங்கம் பிடித்த பன்றியே! சில்வியாவை திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறாயா?' என்று கேட்டேன். அதற்கு அவன், 'நான் உறவு கொள்ளும் பெண்கள் அனைவரையும் நான் திருமணம் செய்ய வேண்டுமா?' என்றான். நான் உடனே துப்பாக்கி இருந்த கவரை மேசை மீது வைத்து விட்டு அவனை அடித்து நொறுக்கப் போவதாக சொன்னேன். அவன் பாய்ந்து கவருக்குள் இருந்த துப்பாக்கியை எடுத்து என்னை வெளியே போகுமாறு மிரட்டினான். நான் துப்பாக்கியை வாங்க போராடினேன். அப்போது இரண்டு குண்டுகள் வெடித்து அவன் மீது பாய்ந்து விட்டது" நானாவதியின் வாக்குமூலத்தின் முக்கியப் பகுதி.

கணவனுக்கு உதவியாக சில்வியாவும், கிளிப்பிள்ளை போல நானாவதியின் சாட்சிக்கு சாதகமாக வாக்குமூலம் கொடுத்தார். இவர்களது இந்த வாதத்தை எதிர்பார்த்திருந்த அரசுத் தரப்பு சில்வியா அஹ¤ஜாவுக்கு எழுதிய கடிதங்களை வணங்களாக தாக்கல் செய்து இருந்தது. மார்ச் மாதம் பத்தொன்பதாம் தேதி' 1959ம் வருடம் சில்வியா இரு கடிதங்களை அனுப்பியிருக்கிறார். முதல் கடிதம் 1958 மே மாதம் எழுதப்பட்டது. அதில், 'நேற்று இரவு நீ மணமுடிக்கக் கூடிய அநேக பெண்களைப் பற்றி பேசிய போது, எனக்குள் ஏதோ அறுந்து போனது போல இருந்தது. வேறு யாருடனும் நீ நெருக்கமாக இருப்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது' என்றிருந்தது.

இரண்டாவது கடிதத்தில், 'நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று நான் என்னால் முடிந்ததைச் செய்வேன். எனக்கு நீ வேண்டும். நாம் நினைத்த காரியங்கள் கைகூடும்' என்று நம்பிக்கையாக எழுதப்பட்டிருந்தது. கடைசி கடிதம் கொலை நடப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,' நான் உன்னுடன் வரப்போவதை எதுவும் தடுக்கப் போவதில்லை. நான் முடிவெடுத்து விட்டேன். எனது மனம் மாறாது. இந்த ஒரு மாதமும் நான் என்னைத் துன்புறுத்திக் கொள்கிறேன், பின்னர் ஏதும் புதிய பிரச்னைகள் முளைத்து விடாமல் இருப்பதற்க்காக' என்று இருந்தது. இந்த மூன்றாவது கடிதம் அஹ¤ஜாவும் சில்வியாவும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்து விட்டதாக நம்ப வைக்கிறது. ஆக நானாவதி கூறியது ஏற்றுக் கொள்ளமுடியாதது.

'நானாவதி மிகச் சரியாக சுடுவதில் தேர்ச்சி பெற்றவர். எனவே அஹ¤ஜாவின் உடலில் ஏறுக்கு மாறாக ஏற்பட்டுள்ள குண்டுக் காயங்கள் நானாவதி அவரை சுட்டிருந்தால் ஏற்பட்டிருக்காது' என்று பின்னாளில் இந்திய கப்பற்படை தலைவராக பொறுப்பேற்ற காமடோர் நந்தா நானாவதியின் சார்பாக சாட்சி சொன்னார். மிகவும் மனம் கொந்தளித்த நிலையில் மிக அருகே இருக்கும் ஒரு நபரை சுடும் போது திறமையெல்லாம் இரண்டாமிடம் என்பதுதான் உண்மை.

முக்கியமாக, கட்டிட காவலாளி புரன்சிங்கிடம் நானாவதி, 'தான் அஹ¤ஜாவைக் கொன்று விட்டதாக' கொடுத்த குற்ற ஒப்புதல் (confession), எல்லாம் 20 வினாடிகளுக்குள் நடந்து முடிந்து விட்டதாக வீட்டிலிருந்தவர்கள் அளித்த சாட்சி, கொலை நடந்த அறையில் சண்டை நடைபெற்றதற்கான அடையாளமே இல்லாதது, துப்பாக்கியில் இருந்து வெளியேறிய மூன்று தோட்டாக்கள், அதனை செலுத்துவதற்கு வேண்டிய சக்தி, அஹ¤ஜாவின் நெஞ்சில் பாய்ந்த குண்டுக் காயத்தில் கரி பொசுங்கிய அடையாளம் எதுவும் இல்லாதது, இடுப்பில் கட்டிய டவல் கூட அவிழாமல் அஹ¤ஜா விழுந்து கிடந்த நிலை மற்றும் அவரது மூக்குக் கண்ணாடி உடையாமல் இருந்தது ஆகிய காரணிகள் மற்றும் பல காரணிகள், 'நடந்தது போராட்டத்துக்கு பின்னர் நிகழ்ந்த விபத்து' என்று நானாவதி கூறியதை பொய்யாக்கியது.

தீர்ப்பு நாளன்று நானாவதியின் தரவாளர்கள், முக்கியமாக அவர் சார்ந்த பார்ஸி சமூகத்தினர் பம்பாய் நகரெங்கும் பிரார்த்தனை ஏற்பாடு செய்திருந்தனர். அதன் பலனோ அல்லது வேறு பலன்களோ, 'நடந்தது, விபத்து. நானாவதி குற்றமற்றவர்' என்ற ஜூரர்களின் தீர்ப்பு பம்பாய் நீதித்துறை வட்டாரங்களில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.


'நானாவதி குற்றவாளியல்ல' என்ற ஜூரர்களின் முடிவை செஷன்ஸ் நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. முடிவு சாதாரண நிலையில் தெளிந்த மனிதர்கள் எடுக்கும் நிலையை மீறியதாக கருதி உயர்நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பினார். வழக்கினை ஆராய்ந்த பம்பாய் உயர் நீதிமன்றம் 1960ம் வருடம் மார்ச் மாதம் 11ம் தேதி, 'நானாவதியை குற்றவாளி என்று தீர்மானித்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது' அது ஒரு விபத்து இல்லை என்றால் குறைந்த பட்சம் ‘திட்டமிட்ட கொலை (murder) அல்ல’ என்ற வாதத்தினையும் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதாவது, சில்வியா நானவதியிடம் தனக்குள்ள காதலைக் கூறி சில மணி நேரம் கழித்து, நாய்க்கு மருந்து வாங்கப் போவதாக கூறி துப்பாக்கியை பெற்று பின்னர் கொலை செய்ததால் அது திட்டமிட்ட கொலையே என்று தீர்மானித்தது. உணர்ச்சி வெள்ளத்தில் செய்யப்படும் கொலை (homicide under sudden provocation) அத்தகைய உணர்ச்சிகள் தூண்டப்பட்டு உடனடியாக அது வடிந்து மறைவதற்குள் செய்யப்பட வேண்டும். அந்த வகை கொலைகளுக்கு தண்டனை குறைவு.

உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்த அதே நாள் அப்போதைய பம்பாய் மாகாண கவர்னராக இருந்த திரு.பிரகாசா ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். அதாவது,' நானாவதி உச்ச நீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்யும் வரை அவரது தண்டனை ரத்து செய்யப்பட்டு அவர் ஐ.என்.எஸ்.குஞ்சலியிலுள்ள கப்பறபடை சிறையிலேயே இருக்க வைக்கப்பட வேண்டும்' என்பதாகும். எனவே நானாவதி பொதுவான சிறைக்குப் போவது மறுபடியும் தடுக்கப் பட்டது. ஆனால் இந்த முறை ஆளுஞர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து மன்னிப்பளிக்கும் தனது விஷேஷ அதிகாரத்தை பயன்படுத்தியிருந்தார். ஒரு மாநில ஆளுஞருக்கும், குடியரசுத் தலைவருக்கும் இத்தகைய மன்னிப்பு அளிக்கும் அதிகாரம் இருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் அநேக சட்டப் பிரச்னைகள் எழுப்பப்பட்டன. பொறுமையக அனைத்து பிரச்னைகளையும் ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் வழக்கின் அனைத்து தன்மைகளையும் அலசி ராய்ந்து 1961 ம் ண்டு நவம்பர் இருபத்தி நாலாம் தேதி தனது தீர்ப்பின் மூலம் நானாவதிக்கு அளிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து அவரது அப்பீலை தள்ளுபடி செய்தது.

நானாவதி சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் விரைவிலேயே அப்போது பம்பாய் மாகாண ளுஞராக இருந்த திருமதி.விஜயலட்சுமி பண்டிட் (ஜவஹர்லால் நேருவின் சகோதரி) அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நானாவதியை மன்னித்து விடுதலை செய்து விட்டார்.

விடுதலையடைந்த நானாவதி தனது குடும்பத்துடன் கனாடா நாட்டில் குடியேறி விட்டார். இரண்டு வருடங்களாக மக்களிடையே அதிகமாய் அலசப்பட்ட, பல்வேறு நீதிமன்றங்களில் நாட்கணக்காக ஆராயப்பட்ட, இறுதியில் இந்திய நீதிபரிபாலன முறையில் இருந்த ஜூரர்கள் முறை அகற்றப்பட முக்கிய காரணமாக இருந்த 'அஹ¤ஜா கொலை வழக்கு' ஒரு நாடகம் என்று மக்களில் சிலர் பேசத் தொடங்கினர்.....

***

2 comments:

Nakkiran said...

Very Interesting...

மக்கள் சட்டம் said...

குற்ற மனம் (Mens Rea)என்ற கருத்தாக்கத்திற்கு உதாரணமாக சட்டக்கல்லூரி ஆசிரியர் கூறிய இந்த வரலாறு மனதில் ஆழமாக பதிந்திருந்த நிலையில், சட்டக்கல்லூரி தேர்வில் "சிறுகுறிப்பு வரைக" என்ற கேள்விக்கு பதிலாக இந்த சம்பவத்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எழுதி மற்ற கேள்விகளுக்கான விடைகளை எழுத போதிய நேரமின்றி தவித்தது நினைவுக்கு வந்தது.

பதிவுக்கு நன்றி.

-சுந்தரராஜன்